பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் தொழுகை பயிற்சி முகாம்
அல்குர்ஆன் பாடசாலை என்பது வெறுமனே அல்குர்ஆனை ஓதப்பயிற்றுவிப்பதோடு தமது பணியை சுருக்கிக் கொள்ளாமல் சிறார்கள் தமது அன்றாட வாழ்வை ஒழுங்கு படுத்தவும் இஸ்லாமிய வாழ்க்கையை பேணி நடக்கவும் வழிகாட்ட வேண்டும். அந்த வகையில் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை தமது மாணவர்களை தொழுகை பற்றி அறிவூட்டுவதையும் அதனை நடைமுறை ரீதியாக பழக்குவதையும் இலக்காக கொண்டு தொழுகை பயிற்சி முகாம் ; (Training
Camp On Salath) ஒன்றை 10-12-2015 வியாழக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 04.30 மணிவரை காத்தான்குடி கடற்கரை வளாகத்தில் நடாத்தியது.
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ;nஷய்க் யு.சு.ஆ அஸ்ஹர் நளீமியின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தொழுகை பயிற்சி முகாமில் வுழு, தயம்மும் செய்யும் ஒழுங்குகள், அதான், இகாமத் சொல்லும் முறைகள், தொழும் ஒழுங்கு, அதில் ஓதும் அவ்றாதுகள், தொழுகை முடிந்த பின் மொழியும் திக்ர்கள் என பல்வேறு விடயங்கள் காணொளிகள், பயிற்சிகள், விளையாட்டுக்கள், கார்டூன்களினூடாக ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தி பயிற்றுவிக்கப்பட்டது.
பிஸ்மியில் கல்வி பயிலும் 7 வயதை அடைந்த மாணவர்களில் 105 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றதோடு தாம் இன்று முதல் எம் மீது கடமையாக்கப்பட்டுள்ள தொழுகைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதாக உறுதிமொழி வழங்கினர். அத்தோடு நிகழ்வில் கலந்துகொண்ட பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் ஆ.டீ.ஆ பிர்தௌஸ் நளீமி இம்முகாமின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தியதோடு இவ்வேளைத்திட்டம் முழு நாடு தழுவிய ரீதியில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், சிறார்களுக்காக அழகிய முறையிலும், எளிய நடையிலும் படவிளக்க வழிகாட்டலுடன் வடிவமைக்கப்பட்ட 'வாருங்கள் தொழுவோம்' என்ற புத்தகமும் பிஸ்மி குழுமத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.

