
"புதிய தேர்தல் முறை தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும்": NFGG வேண்டுகோள் விடுக்கின்றது
ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
"புதிய தேர்தல் முறை, சிறுபான்மை சமூகங்களின் நியாயமான அரசியல் பிரதிநிதித்துவங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். இதனை உறுதி செய்வதற்காக சகல சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டும்" என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட சந்திப்பு ஒன்று கடந்த 07.03.2015 அன்று காத்தான்குடியில் இடம்பெற்றது.

