
கள்ள நோட்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு!!
(புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)
கள்ள நோட்டுகள் வைத்திருப்பதால் மட்டும் ஒருவரை குற்றவாளி என்று கருதி விட முடியாது என்று கூறிய மும்பை ஐகோர்ட்டு, கீழ்கோர்ட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுவித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மும்பையில் பஞ்சாப் நேசனல் வங்கியின் குர்லா கிளைக்கு கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி முன்ஷி முகமது ஷேக் என்ற வாடிக்கையாளர் வந்தார். அவர் வங்கியில் ரூ.500 மதிப்புள்ள 17 நோட்டுகள், ரூ.1000 மதிப்புள்ள ஒரு நோட்டு என மொத்தம் ரூ.9,500-யை டெபாசிட் செய்தார். அதில் சில கள்ள நோட்டுகள் இருப்பதாக காசாளர் சந்தேகப்பட்டார்.




