Featured Home (TOP)

Recent Comments

Sunday, April 26, 2015

Unknown

அகர ஆயுதம் அமைப்பு தென்கிழக்கு பல்கலை கழக மாணவர் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்த முழுநாள் இலக்கிய நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அகர  ஆயுதம் அமைப்பு தென்கிழக்கு பல்கலை கழக மாணவர் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்த முழுநாள் இலக்கிய நிகழ்வு நேற்று தென்கிழக்கு பல்கலைக் கழக கலை கலாசார பீட மண்டபத்தில் நடைபெற்றது.
 
தென்கிழக்கு படைப்பிலக்கிய பங்களிப்பு எனும் பெருவெளி கருத்தாடலில் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், மன்சூர் ஏ.காதர் , ரீ.எல்.ஜவ்பர்கான் ,ரியாஸ்குரானா உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.
 
திறந்த வெளி கவியரங்கில் தமிழ்த்தென்றல் அலிஅக்பர் தலைமையில் கவிஞர்களான பாலமுனை பாறூக் ,அன்புடீன் ,மருதநிலா நியாஸ் ,இறக்காமம் பர்ஸானா ,கிரான்குளம் சுரேஸ் ,மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் ,ரீ.எல்.ஜவ்பர்கான் கிண்ணியா அமீர்அலி என்.நஜ்முல் ஹூஸைன் ஆகியோர் கவிதைபாடினர்.
 
இங்கு தென்கிழக்கு பல்கலை கழக மாணவர்களின் நிகழ்வுகளும் அரங்கேறின.









Read More
Unknown

காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவருக்கு கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் வாழ்த்து

புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
தலைவர் - கிழக்கு ஊடக சங்கம்

காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இளம் ஊடகவியலாளர் டீன் பைரூஸ், ஆளுமைமிக்க ஒரு இளம் தலைவராக செயற்பட்டு அங்கத்தவர்களை அரவணைத்துச் செயற்படுவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைவதாக கிக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More
Unknown

மஞ்சந்தொடுவாய் அமீரலி வித்தியாலய 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு NFGG கல்வி உதவி

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி



மஞ்சந்தொடுவாய் அமீரலி வித்தியாலயத்தில் கற்கும் இம்முறை 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) முன்னோடி பரீட்சை வினாத்தாள்களை வழங்கியது.

நடைபெறவிருக்கும் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அதற்கான ஊக்குவிப்பு வழங்கும் வகையில் மேற்படி வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டன. 
மேற்படி வினாத்தாள்களின் முதலாவது தொகுதி வழங்கும் நிகழ்வு நேற்று (253.04.2015) சனிக்கிழமை மாலை மஞ்சந்தொடுவாய் அமீரலி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் முஹம்மத் கான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார், NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், NFGGயின் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர் வித்யாகீர்த்தி MM.அமீர் அலி ஆசிரியர், பாடசாலை STC உறுப்பினர் MIM.ஹக்கீம் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மேற்படி முன்னோடி வினாத்தாள் முதலாவது தொகுதி NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்களினால் வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியை அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.






Read More
Unknown

இரு வாரக்காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் கைது செய்யப்படலாம்!

இரு வாரக்காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊழல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் குற்றச்சாட்டுக்களின் நிமித்தம் 25 அதிகாரிகள் மற்றும் அரசியல் தரப்பினரும் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே கைது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த தகவல் வழங்கியுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர,  52 பேருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற பாரிய ஊழல்கள் குறித்து தகவல்கள் திரட்டப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
Read More
Unknown

தேசிய கொடியை தவறாக கையாண்டமை - விசாரணைகள் அரம்பம் !

தேசியக் கொடியில் மாற்றம் செய்து அதனை போராட்டத்தில் பயன்படுத்திய விவகாரம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்னால் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்கள் உள்ளடக்கப்படாத இலங்கை தேசியக் கொடியை ஒத்த கொடி பயன்படுத்தப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக தெரியவருகின்றது.
இதனிடையே, குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் தேசியக் கொடி உருமாற்றப்பட்ட விடயத்திற்காக மன்னிப்புக் கோரியுள்ளனர்.
Read More
Unknown

பம்பலப்பிட்டி பிரபலப் பாடசாலைக்குள் கொல்லப்பட்ட பெண்! நடந்தது என்ன?

அது கடந்த 19ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை சூரியன் மறைய சில மணி நேரம் இருந்த போது அதா­வது மாலை நான்கு மணிக்கு பம்­ப­லப்­பிட்டி பொலி­ஸா­ருக்கு முறைப்­பா­டொன்று கிடைக்­கி­றது.பம்­ப­லப்­பிட்டி பிர­தே­சத்தின் பிர­ப­ல­மான ஆண்கள் பாட­சா­லையிள் அறை­யொன்றில் அப்­பா­ட­சா­லையின் சிற்­றூ­ழி­ய­ராக கட­மை­யாற்­றிய பெண்ணின் சடலம் காணப்­ப­டு­வ­தாக அந்த முறைப்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டது.
முறைப்­பாட்டை அடுத்து பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொறுப்­ப­தி­காரி உப­பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் மெத்­தா­நந்த தலை­மை­யி­லான பொலிஸ் குழு ஸ்தலம் விரைந்து உடன் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.ஆம் அந்த பெண் சடலம் குறித்த தக­வல்­களை தெரிந்து கொள்ள பொலி­ஸா­ருக்கு அவ்­வ­ளவு நேரம் தேவைப்­ப­ட­வில்லை.
கடந்த 14 வரு­டங்­க­ளாக குறித்த பாட­சா­லையில் சிற்­றூ­ழி­ய­ராக சேவை செய்யும் 45வய­து­டைய அக­ல­வத்­தகே சந்­திரிகா சும­தி­பால என்ற பெண்ணே சட­ல­மாக கிடப்­பதை பொலிஸார் உறுதி செய்து கொண்­டனர்.பாட­சா­லையின் ஆரம்பப் பிரிவு உள்ள பகு­தியை அண்­மித்த களஞ்­சிய அறை­யி­லேயே சந்தி­ரி­காவின் சடலம் கிடந்­தது.
சந்­திரிகா அணிந்­தி­ருந்த கீழாடை இடுப்புப் பகு­திக்கு மேல் உயர்த்­தப்­பட்­டி­ருந்­த­துடன் கீழுள்­ளாடை அந்த சடலம் அருகே கிடந்­தது. உடலில் சீராய்வு மற்றும் கீறல் காயங்கள் வேறு. இவற்றை வைத்­துப்­பார்த்த பொலிஸார் யாரோ சந்­திரி­காவை துஷ்­பி­ர­யோகம் செய்து கொலை செய்­தி­ருக்­கலாம் என அனு­மா­னித்து விசா­ர­ணை­களை முடுக்கி விட்­டனர்.
ஆம் சந்­திரிகா இரு பெண் பிள்­ளை­களின் தாய். கிரு­லப்­பனை பிர­தே­சத்தை சேர்ந்­தவர்.
அந்த பாட­சா­லை­யி­லேயே தொடர்ச்­சி­யாக சேவை­யாற்றி வந்த அவர் அங்­கி­ருந்து விலக உத்­தே­சித்­தி­ருந்­தவர். எனினும் தனது இடத்­துக்கு பொருத்­த­மான ஒரு­வரை பாட­சாலை நிர்­வாகம் தெரிந்­தெ­டுக்கும் வரை தனது சேவையை தொடர்ந்­தவர்.
இவ்­வா­றான பின்­ன­ணி­யில்தான் கடந்த சனிக்­கி­ழமை (18) சந்­திரிகா கிரு­லப்­ப­னையில் இருந்து பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள பாட­சா­லைக்கு தனது கட­மை­க­ளுக்­காக வந்­துள்ளார்.
அதா­வது புது­வ­ருட கொண்­டாட்­டங்­க­ளுக்­காக விடு­முறை வழங்­கப்­பட்­டி­ருந்த பாட­சாலை மீண்டும் திங்­கட்­கி­ழமை 20ஆம் திகதி ஆரம்­பிப்­ப­தை­யொட்டி பாட­சாலை சூழலை சுத்தம் செய்­யவே அவர் இவ்­வாறு சனி­யன்றும் பாட­சாலை வர­வேண்­டி­யேற்­பட்­டது. சனி நண்­பகல் முதல் எந்த தக­வலும் இல்­லாது போன சந்­திரி­காவின் உயி­ரற்ற உடலை மறுநாள் ஞாயி­றன்று மாலை முறைப்­பாட்­டுக்கு அமை­வாக பொலி­ஸாரால் மீட்க முடிந்­தது.
சட­ல­மாக மீட்­கப்­பட்ட சந்­தி­ரிகா தொடர்பில் போது­மான தக­வல்­களை திரட்டிக் கொண்ட பம்­ப­லப்­பிட்டி பொலிஸார் மறுநாள் திங்­க­ளன்று இடம்­பெற்ற நீதிவான் நீதி­மன்ற சோத­னை­களின் பின்னர் பிரேத பரி­சோ­த­னைக்­காக சட­லத்தை தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­தனர்.
இந்­நி­லையில் தான் விஷேட பொலிஸ் குழு அமைத்து பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்ட, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பாலித்த பனா­மல்­தெ­னிய கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் எல்.என்.ஜி. ஜய­ரட்ன ஆகி­யோரின் வழி­ந­டத்தல் மற்றும் மேற்­பார்­வையின் கீழ் பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கமல் பெரே­ராவின் நேரடி கட்­டுப்­பாட்டில் அப் பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் மெத்­தா­நந்த தலை­மையில் குழு அமைக்­கப்­பட்­டது.
அந்த குழுவில் 9 பொலிஸார் உள்­வாங்­கப்­பட்­டனர். உப பொலிஸ் பரி­சோ­தகர் விஜே­சேன சார்­ஜன்­க­ளான அழ­கக்கோன் (30353) விஜே­ரட்ன (7358) ஆகி­யோ­ருடன் கான்ஸ்­ட­பிள்­க­ளான அஜித் (58420) குமார (60021) தரங்க (66499) பிரி­யங்­கர (76782) சரத் (76938) சில்வா (81778) வீர­சிங்க (89081) ஆகி­யோரும் சாரதி அமி­லவும் இணைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் தான் திங்­க­ளன்று மாலை கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்ற பிரேத பரி­சோ­த­னையில் தீர்ப்பு வழங்­கப்­ப­டாது திறந்த தீர்ப்­பொன்று வழங்­கப்­பட்­டது.இதனால் சந்­தி­ரி­காவின் மரணம் கொலையா ? இல்­லையா ?
என்­பதை உறுதி செய்ய முடி­யாமல் போனது. சட்ட வைத்­திய அதி­கா­ரியின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சந்­தி­ரி­காவின் உடற்­பா­கங்கள் இர­சா­யன பகுப்­பாய்வு மற்றும் டீ.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு அனுப்­பப்­பட்­டன.


அதனை தொடர்ந்து சட­ல­மா­னது உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.இந்­நி­லையில் கொலையா, இல்­லையா என்ற மர்மம் இன்று வரை துலங்­காத நிலையில் குறித்த விஷேட பொலிஸ் குழு­வா­னது சடலம் மீட்­கப்­பட்ட விட­யத்தை வைத்து விசா­ர­ணை­யினை புதிய கோணத்தில் நகர்த்­தி­யது.
பொலிஸ் மோப்ப நாயின் உத­வி­யுடன் சில தட­யங்­களை சேக­ரித்த அந்த விஷேட குழு சம்­பவம் தொடர்பில் சுமார் 11 பேரிடம் வாக்கு மூலங்­களைப் பெற்று பதிவு செய்து கொண்­டது.
அதில் பிர­தேச வாசிகள் காவ­லாளி பாட­சா­லையின் பழைய மாண­வர்கள் என பலரும் அடங்­குவர்.இந்­நி­லையில் தான் உப பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் மெத்­தா­நந்­த­வுக்கு சரத் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) எனும் தக­வ­ல­ளிக்கும் அவர் தொலை­பே­சியில் தொடர்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.
”சேர் நான் சரத் பேசு­கிறேன். அந்த பெண்ணின் சடலம் இருந்த பாட­சாலை வளா­கத்­திற்குள் சனி­யன்று சற்று வய­தான ஒருவர் சென்­றுள்ளார். பலரும் இதனை கண்­டுள்­ளனர் சேர். விசா­ரித்தால் தகவல் அறி­யலாம்எனக்­கூறி தகவல் ஒன்றை வழங்­கி­யுள்ளார்.
இந்த தக­வலை வைத்தே உப­பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் தலை­மை­யி­லான விசேட பொலிஸ் குழு துப்பு துலக்க ஆரம்­பித்­தது. இது தொடர்பில் தொடர்ச்­சி­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து செல்லும் போது தான் செபஸ்­டியன் லோரன்ஸ் என்ற நபர் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைக்­கின்­றது.
செபஸ்­டியன் லோரன்ஸ் சந்­திரி­காவின் வீடு அமைந்­துள்ள பிர­தே­சத்தை சேர்ந்­தவர் இருவருக்கு மிடையில் உறவு இருந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.இதனை தொடர்ந்து விசா­ர­ணைகள் வேக­ம­டைந்­தன.
செபஸ்­டியன் லோரன்ஸை விசா­ர­ணை­க­ளுக்­காக கிரு­லப்­ப­னையில் வைத்து கைது செய்த பொலிஸார் அவரை தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தினர்.
இதன் போது சந்­திரிகா சனி­யன்று பாட­சா­லையில் வேலை செய்த போது பாட­சா­லைக்குள் நுழைந்த நபர் செபஸ்­டியன் தான் என்­பது உறு­தி­யா­னது.“சேர் …. நானும் சந்­திரி­காவும் தொடர்­பினை பேணி வந்தோம் .
வழமை போன்றே அன்றும் தொலை­பே­சியில் உரை­யா­டிய நான் அவர் வேலை செய்யும் பாட­சா­லையில் எவரும் இல்­லா­ததால் அங்கு சென்றேன் நான் பாட­சா­லையின் பின்­வாயில் வழி­யாக உள் நுழைந்தேன். நாம் சந்தித்தோம். அவ்­வ­ளவு தான். மா­ற­ாக நான் அவரை கொல்­ல­வில்லை. எனக்கு அவ்­வ­ள­வுதான் தெரியும். நான் அதன்­பின்னர் பாட­சா­லையில் இருந்து சென்று விட்டேன் என செபஸ்­டியன் பொலி­ஸா­ரிடம் வாக்கு மூலம் அளித்து தான் கொலை செய்­ய­வில்லை என குறிப்­பிட்டார்.
எனினும் பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் சந்­திரிகா உயி­ரி­ழந்­தி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்­கப்­படும் சனி­யன்று நண்­பகல் 12.00 இற்கும் 12.45 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் செபஸ்­டியன் அந்த பாட­சா­லைக்குள் இருந்­துள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லை­யி­லேயே சடலம் மீட்­கப்­படும் போது இருந்த முறையும் வாக்கு மூலத்தில் செபஸ்­டியன் குறிப்­பிட்ட சில விட­யங்­க­ளிலும் ஒற்­று­மையை பொலிஸார் அவ­தா­னித்­தனர்.இந்­நி­லையில் பாட­சா­லையின் காவ­லா­ளியை விசா­ரித்த பொலிஸார் சம்­பவம் தொடர்பில் அவர் ஏதேனும் தக­வலை மறைக்­கின்­றாரா ?
என தேடினர்.அனு­ரா­த­புரம் கஹட்­டஸ்­தி­கி­லிய பிர­தே­சத்தை சேர்ந்த காவ­லா­ளி­யான சரத் நிஸந்த பண்­டித்­த­ரத்­னாவை பொலிஸார் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தினர்.பொலிஸார்: உண்­மையை சொல்­லுங்கள் நடந்­தது என்ன ?காவ­லாளி சரத் சேர்.. எனக்கு எதுவும் தெரி­யாது.
பொலிஸ்: ஒருவர் பாட­சா­லையில் நுழையும் வரை எங்கே இருந்­தீர்கள் ?காவ­லாளி சரத் சேர்….. உண்­மையில் அவர் வந்­தாரா என்­பது கூட எனக்கு தெரி­யாது.இப்­படி தனக்கு எது­வுமே தெரி­யாது என கூறி காவ­லாளி தன் மீதான கேள்வி கணை­களை அவர் சமா­ளிக்க முனைந்­தாலும் அவர் ஏதோ ஒன்றை மறைப்­ப­தாக பொலிஸார் சந்­தே­கித்­தனர்.செவ்­வா­யன்று அதா­வது சடலம் மீட்­கப்­பட்ட இரு நாட்­க­ளுக்குள் பிர­தான சந்­தேக நப­ரான செபஸ்­டி­ய­னுக்கு உடந்­தை­யாக செயற்­பட்டார் என காவ­லா­ளி­யையும் கைது செய்­தனர்.
சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்ட அவ்­வி­ரு­வரும் 22 ஆம் திகதி புதன்­கி­ழமை புதுக்­கடை 03 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றின் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.இதன்­போது அவர்கள் இரு­வ­ரையும் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்­டி­ருந்தார்.
தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் அறி­வியல் ரீதி­யி­லான தக­வல்­களும் பொலி­ஸாரால் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அறிய முடி­கின்­றது.
குறிப்­பாக செபஸ்­டி­யனின் தொடர்­பான விட­யங்­களை கண்­ட­றி­யவும் குறித்த நாளன்று அவ்­வி­ரு­வரும் சந்­திப்­பதை உறு­திப்­ப­டுத்தும் வித­மா­கவும் சந்­தி­ரி­கா­வி­னதும் செபஸ்­டி­ய­னி­னதும் தொலை­பேசி விப­ரப்­பட்­டி­யலும் பொலி­ஸாரால் பரீட்­சிக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் நேற்று முன்­தினம் பிர­தான சந்­தேக நப­ரான செபஸ்­டி­யனின் இரத்த மாதிரி பெறப்­பட்டு டீ. என்.ஏ. பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­துடன் சம்­பவ தினம் செபஸ்­டியன் அணிந்­தி­ருந்த ஆடையும் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் இச்­சம்­பவம் குறித்த பம்­ப­லப்­பிட்டி பொலிஸார் தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் எதிர்­வரும் 27 ஆம் திகதி திங்­க­ளன்று மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்­றுக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளனர்.
பிரேத பரி­சோ­தனை அறிக்கை தீர்ப்­பொன்றை இன்னும் வெளிப்­ப­டுத்­தாத நிலையில் பொலிஸார் அந்த அறிக்­கை­க­ளுக்­காக காத்­துள்­ளனர்.அரச இர­சா­யன பகுப்­பாய்வு டீ.என்.ஏ. பரி­சோ­த­னை­களின் பின்­னரே சந்­தி­ரிகா கொலை செய்­யப்­பட்­டாரா அல்­லது வேறு கார­ணங்­களால் உயி­ரி­ழந்­துள்­ளரா ?
என்­ப­தனை அறி­யக்­கூ­டி­ய­தாக இருக்கும்.அதன் பின்­னரே கொலைக்­கான கார­ணமும் ஏனைய விட­யங்­க­ளையும் வெளிப்­ப­டுத்த முடி­யு­மாக இருக்கும்.
அதன்­படி கடந்த 19 ஆம் திகதி பம்­ப­லப்­பிட்டி பாட­சா­லை­யொன்­றுக்குள் மீட்­கப்­பட்ட சடலம் குறித்த மர்மங்கள் தொடர்ந்தும் மர்மங்களாக இருக்காது அது வரை கேசரி அவதானத்துடன்…….
கடந்த 19ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை. மாலை நான்கு மணிக்கு பம்­ப­லப்­பிட்டி பொலி­ஸா­ருக்கு முறைப்­பா­டொன்று கிடைக்­கி­றது.
பம்­ப­லப்­பிட்டி பிர­தே­சத்தின் பிர­ப­ல­மான ஆண்கள் பாட­சா­லையின் அறை­யொன்றில் பெண்ணின் சடலம் காணப்­ப­டு­வ­தாக கூறப்பட்டது. பா­ட­சா­லையின் சிற்­றூ­ழி­ய­ராக கட­மை­யாற்­றிய பெண்ணின் சடலமே அது.
முறைப்­பாட்டை அடுத்து பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­பான பொறுப்­ப­தி­காரி உப­பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் மெத்­தா­நந்த தலை­மை­யி­லான பொலிஸ் குழு ஸ்தலம் விரைந்து உடன் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.
அங்கு சென்ற பொலிசார் துரிதமாகவே முதற்கட்ட தகவல்களை சேகரித்து கொண்டனர். கடந்த 14 வரு­டங்­க­ளாக பாட­சா­லையில் சிற்­றூ­ழி­ய­ராக சேவை செய்யும் 45வய­து­டைய அக­ல­வத்­தகே சந்­திரிகா சும­தி­பால என்ற பெண்ணே சட­ல­மாக கிடப்­பதை பொலிஸார் உறுதி செய்து கொண்­டனர்.
பாட­சா­லையின் ஆரம்பப் பிரிவு உள்ள பகு­தியை அண்­மித்த களஞ்­சிய அறை­யி­லேயே சந்தி­ரி­காவின் சடலம் கிடந்­தது. சந்­திரிகா அணிந்­தி­ருந்த கீழாடை இடுப்புப் பகு­திக்கு மேல் உயர்த்­தப்­பட்­டி­ருந்­த­துடன் கீழுள்­ளாடை அந்த சடலம் அருகே கிடந்­தது.
உடலில் சீராய்வு மற்றும் கீறல் காயங்கள் வேறு. இவற்றை வைத்­துப்­பார்த்த பொலிஸார் யாரோ சந்­திரி­காவை துஷ்­பி­ர­யோகம் செய்து கொலை செய்­தி­ருக்­கலாம் என அனு­மா­னித்து விசா­ர­ணை­களை முடுக்கி விட்­டனர்.
சந்­திரிகா இரு பெண் பிள்­ளை­களின் தாய். கிரு­லப்­பனை பிர­தே­சத்தை சேர்ந்­தவர். அந்த பாட­சா­லை­யி­லேயே தொடர்ச்­சி­யாக சேவை­யாற்றி வந்த அவர் அங்­கி­ருந்து விலக உத்­தே­சித்­தி­ருந்­தவர்.
எனினும் தனது இடத்­துக்கு பொருத்­த­மான ஒரு­வரை பாட­சாலை நிர்­வாகம் தெரிந்­தெ­டுக்கும் வரை தனது சேவையை தொடர்ந்­து கொண்டிருந்தார்.
இவ்­வா­றான பின்­ன­ணி­யில்தான் கடந்த சனிக்­கி­ழமை (18) சந்­திரிகா கிரு­லப்­ப­னையில் இருந்து பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள பாட­சா­லைக்கு தனது கட­மை­க­ளுக்­காக வந்­துள்ளார்.
அதா­வது புது­வ­ருட கொண்­டாட்­டங்­க­ளுக்­காக விடு­முறை வழங்­கப்­பட்­டி­ருந்த பாட­சாலை மீண்டும் திங்­கட்­கி­ழமை 20ஆம் திகதி ஆரம்­பிப்­ப­தை­யொட்டி பாட­சாலை சூழலை சுத்தம் செய்­யவே அவர் இவ்­வாறு சனி­யன்றும் பாட­சாலை வர­வேண்­டி­யேற்­பட்­டது.
சனி நண்­பகல் முதல் எந்த தக­வலும் இல்­லாது போனநிலையில், சந்­திரி­காவின் உயி­ரற்ற உடலை மறுநாள் ஞாயி­றன்று மாலை பொலி­ஸாரால் மீட்க முடிந்­தது.
சட­ல­மாக மீட்­கப்­பட்ட சந்­தி­ரிகா தொடர்பில் போது­மான தக­வல்­களை திரட்டிக் கொண்ட பம்­ப­லப்­பிட்டி பொலிஸார் மறுநாள் திங்­க­ளன்று இடம்­பெற்ற நீதிவான் நீதி­மன்ற சோத­னை­களின் பின்னர் பிரேத பரி­சோ­த­னைக்­காக சட­லத்தை தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­தனர்.
இந்­நி­லையில் தான் விஷேட பொலிஸ் குழு அமைத்து பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். திங்­க­ளன்று மாலை கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்ற பிரேத பரி­சோ­த­னையில் தீர்ப்பு வழங்­கப்­ப­டாது திறந்த தீர்ப்­பொன்று வழங்­கப்­பட்­டது.
இதனால் சந்­தி­ரி­காவின் மரணம் கொலையா? இல்­லையா? என்­பதை உறுதி செய்ய முடி­யாமல் போனது. சட்ட வைத்­திய அதி­கா­ரியின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சந்­தி­ரி­காவின் உடற்­பா­கங்கள் இர­சா­யன பகுப்­பாய்வு மற்றும் டீ.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு அனுப்­பப்­பட்­டன. அதனை தொடர்ந்து சட­ல­ம் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.
இந்­நி­லையில் கொலையா, இல்­லையா என்ற மர்மம் இன்று வரை துலங்­காத நிலையில் குறித்த விஷேட பொலிஸ் குழு­வா­னது சடலம் மீட்­கப்­பட்ட விட­யத்தை வைத்து விசா­ர­ணை­யினை புதிய கோணத்தில் நகர்த்­தி­யது.
பொலிஸ் மோப்ப நாயின் உத­வி­யுடன் சில தட­யங்­களை சேக­ரித்த அந்த விஷேட குழு சம்­பவம் தொடர்பில் சுமார் 11 பேரிடம் வாக்கு மூலங்­களைப் பதிவு செய்து கொண்­டது. அதில் பிர­தேசவாசிகள் காவ­லாளி பாட­சா­லையின் பழைய மாண­வர்கள் என பலரும் அடங்­குவர்.
இந்­நி­லையில் தான் உப பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் மெத்­தா­நந்­த­வுக்கு சரத் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) எனும் தக­வ­ல­ளிக்கும் ஒருவர் தொலை­பே­சியில் தொடர்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.
”சேர் நான் சரத் பேசு­கிறேன். அந்த பெண்ணின் சடலம் இருந்த பாட­சாலை வளா­கத்­திற்குள் சனி­யன்று சற்று வய­தான ஒருவர் சென்­றுள்ளார். பலரும் இதனை கண்­டுள்­ளனர் சேர். விசா­ரித்தால் தகவல் அறி­யலாம்” என்ற தகவல் ஒன்றை வழங்­கி­யுள்ளார்.
இந்த தக­வலை வைத்தே உப­பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் தலை­மை­யி­லான விசேட பொலிஸ் குழு துப்பு துலக்க ஆரம்­பித்­தது. இது தொடர்பில் தொடர்ச்­சி­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து செல்லும் போது தான் செபஸ்­டியன் லோரன்ஸ் என்ற நபர் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைக்­கின்­றது.
செபஸ்­டியன் லோரன்ஸ் சந்­திரி­காவின் வீடு அமைந்­துள்ள பிர­தே­சத்தை சேர்ந்­தவர். இருவருக்கு மிடையில் உறவு இருந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதனை தொடர்ந்து விசா­ர­ணைகள் வேக­ம­டைந்­தன. செபஸ்­டியன் லோரன்ஸை விசா­ர­ணை­க­ளுக்­காக கிரு­லப்­ப­னையில் வைத்து கைது செய்த பொலிஸார் அவரை தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தினர்.
இதன் போது சந்­திரிகா சனி­யன்று பாட­சா­லையில் வேலை செய்த போது பாட­சா­லைக்குள் நுழைந்த நபர் செபஸ்­டியன் தான் என்­பது உறு­தி­யா­னது.
“சேர் …. நானும் சந்­திரி­காவும் தொடர்­பினை பேணி வந்தோம் .வழமை போன்றே அன்றும் தொலை­பே­சியில் உரை­யா­டிய நான், அவர் வேலை செய்யும் பாட­சா­லையில் எவரும் இல்­லா­ததால் அங்கு சென்றேன். நான் பாட­சா­லையின் பின்­வாயில் வழி­யாக உள் நுழைந்தேன். நாம் சந்தித்தோம்.
அவ்­வ­ளவு தான். மா­றாக நான் அவரை கொல்­ல­வில்லை. எனக்கு அவ்­வ­ள­வுதான் தெரியும். நான் அதன்­பின்னர் பாட­சா­லையில் இருந்து சென்று விட்டேன்” என செபஸ்­டியன் பொலி­ஸா­ரிடம் வாக்கு மூலம் அளித்து தான் கொலை செய்­ய­வில்லை என கூறினார்.
எனினும் பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் சந்­திரிகா உயி­ரி­ழந்­தி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்­கப்­படும் சனி­யன்று நண்­பகல் 12.00 இற்கும் 12.45 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் செபஸ்­டியன் அந்த பாட­சா­லைக்குள் இருந்­துள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லை­யி­லேயே சடலம் மீட்­கப்­படும் போது இருந்த முறையும் வாக்கு மூலத்தில் செபஸ்­டியன் குறிப்­பிட்ட சில விட­யங்­க­ளிலும் ஒற்­று­மையை பொலிஸார் அவ­தா­னித்­தனர். பாட­சா­லையின் காவ­லா­ளியை விசா­ரித்த பொலிஸார் சம்­பவம் தொடர்பில் அவர் ஏதேனும் தக­வலை மறைக்­கின்­றாரா? என தேடினர்.
அனு­ரா­த­புரம் கஹட்­டஸ்­தி­கி­லிய பிர­தே­சத்தை சேர்ந்த காவ­லா­ளி­யான சரத் நிஸந்த பண்­டித்­த­ரத்­னாவை பொலிஸார் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தினர்.
பொலிஸார்: உண்­மையை சொல்­லுங்கள் நடந்­தது என்ன?
காவ­லாளி சரத்: சேர்.. எனக்கு எதுவும் தெரி­யாது.
பொலிஸ்: ஒருவர் பாட­சா­லையில் நுழையும் வரை எங்கே இருந்­தீர்கள்?
காவ­லாளி சரத்: சேர்… உண்­மையில் அவர் வந்­தாரா என்­பது கூட எனக்கு தெரி­யாது.
இப்­படி தனக்கு எது­வுமே தெரி­யாது என கூறி காவ­லாளி தன் மீதான கேள்வி கணை­களை அவர் சமா­ளிக்க முனைந்­தாலும் அவர் ஏதோ ஒன்றை மறைப்­ப­தாக பொலிஸார் சந்­தே­கித்­தனர்.
செவ்­வா­யன்று அதா­வது சடலம் மீட்­கப்­பட்ட இரு நாட்­க­ளுக்குள் பிர­தான சந்­தேக நப­ரான செபஸ்­டி­ய­னுக்கு உடந்­தை­யாக செயற்­பட்டார் என காவ­லா­ளி­யையும் கைது செய்­தனர்.
சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்ட அவ்­வி­ரு­வரும் 22 ஆம் திகதி புதன்­கி­ழமை புதுக்­கடை 03 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றின் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். அவர்கள் இரு­வ­ரையும் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்­டி­ருந்தார்.
தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் அறி­வியல் ரீதி­யி­லான தக­வல்­களும் பொலி­ஸாரால் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அறிய முடி­கின்­றது.
குறிப்­பாக செபஸ்­டி­யனின் தொடர்­பான விட­யங்­களை கண்­ட­றி­யவும் குறித்த நாளன்று அவ்­வி­ரு­வரும் சந்­திப்­பதை உறு­திப்­ப­டுத்தும் வித­மா­கவும் சந்­தி­ரி­கா­வி­னதும் செபஸ்­டி­ய­னி­னதும் தொலை­பேசி விப­ரப்­பட்­டி­யலும் பொலி­ஸாரால் பரீட்­சிக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் நேற்று முன்­தினம் பிர­தான சந்­தேக நப­ரான செபஸ்­டி­யனின் இரத்த மாதிரி பெறப்­பட்டு டீ. என்.ஏ. பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­துடன் சம்­பவ தினம் செபஸ்­டியன் அணிந்­தி­ருந்த ஆடையும் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் இச்­சம்­பவம் குறித்த பம்­ப­லப்­பிட்டி பொலிஸார் தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் எதிர்­வரும் 27 ஆம் திகதி திங்­க­ளன்று மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்­றுக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளனர்.
பிரேத பரி­சோ­தனை அறிக்கை தீர்ப்­பொன்றை இன்னும் வெளிப்­ப­டுத்­தாத நிலையில் பொலிஸார் அந்த அறிக்­கை­க­ளுக்­காக காத்­துள்­ளனர்.
அரச இர­சா­யன பகுப்­பாய்வு டீ.என்.ஏ. பரி­சோ­த­னை­களின் பின்­னரே சந்­தி­ரிகா கொலை செய்­யப்­பட்­டாரா அல்­லது வேறு கார­ணங்­களால் உயி­ரி­ழந்­துள்­ளரா ? என்­ப­தனை அறி­யக்­கூ­டி­ய­தாக இருக்கும்.
Read More
Unknown

இறையில்லமான பள்ளிவாயல்களின் தொடர்பை நாம் அதிகரித்தக் கொள்ள வேண்டும் முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

புதிய காத்தான்குடி நூராணிய ஜம்ஆ பள்ளிவாயலின் மிக நீண்ட கால தேவையாக இருந்த மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களினால் பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் கையளிக்கும் நிகழ்வு (25.04.2015 சனிக்கிழமை) தலைவர் பீ.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.

புதிய காத்தான்குடி நூராணியா ஜம்ஆ பளளிவாயல் நிர்வாகிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று சுமார் 500000 ரூபா பெறுமதியான சவுன்ட் புறூப்  மின்பிறப்பாக்கி ஒன்றினை நிர்வாகிகளிடம் ஒப்படைத்த பின் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இந்த ஜெனரேட்டரை நான் பள்ளிவாயலுக்கு வந்து உத்தியோக பூர்வமாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உங்களின் வேண்டு கோளுக்கிணங்கவே நான் இங்கு வர நேர்ந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
Read More