முகமூடி தலைக்கவசம் அணியும் தடைச் சட்டம் இன்று (2) முதல் அமுலுக்கு வந்தாலும், அச்சட்டத்தை மீறுவோருக்கு எதிராக தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையை ஒரு மாத காலத்துக்குத் தள்ளிப்போட போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நடைமுறைக்கு வரும் சட்டத்தை மீறுவோர் பொலிஸாரினால் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் அவர்கள்
சாதாரண தலைக்கவசத்தை பொலிஸில் காட்டவேண்டும் என போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுப்
பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமர சிரிசேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
