Featured Home (TOP)

Recent Comments

Friday, May 29, 2015

Unknown

"அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முதல் நடவடிக்கையே பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை"

அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்பும் முதல் நட­வ­டிக்­கை­யாக எதிர்­வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி, பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்­துக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யொன்றை சமர்ப்­பிக்­க­வுள்ளோம் என முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார்.

மேலும் மைத்­திரி அர­சாங்­க­மொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தாக கூறிய இந்த அரசு தற்­போது வைராக்­கி­ய­மா­ன­தொரு ஆட்­சி­யையே நடத்தி வரு­கின்­றது எனவும் தெரி­வித்தார்.
கொழும்பு நார­ஹேன்­பிட்டி அபே­ராம விகா­ரையில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
100 நாட்­களில் மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக கூறிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­கவே நாங்கள் இந்த அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்­கினோம். தற்­போது 100 நாள் முடிந்து மேலும் 50நாட்கள் நிறை­வ­டைந்­துள்­ளன.
மேலும் 100 நாட்­களில் மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக கூறிய வாக்­கு­று­தி­களை இந்த அர­சாங்­கத்தால் நிறைவேற்ற முடி­ய­வில்லை. குறிப்­பாக மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக கூறிய மானி­யங்­களை அவர்­களால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­ய­வில்லை. மேலும் புனர்­நிர்­மாண பணி­களை அவர்­களால் மேற்­கொள்ள முடி­ய­வில்லை. அது­மட்டு­மின்றி அவர்கள் கூறிய ஊழல் மோசடி குற்­றச்­சாட்­டுக்­களை அவர்­களால் நிரூ­பிக்க முடி­யாமல் போயுள்­ளது.
மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனஇ இந்த நாட்டில் மைத்­திரி (கருணை) அர­சாங்­க­மொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தாகக் கூறினார். ஆனால்இ பிர­த­மரோ இந்த நாட்டில் வைராக்­கி­ய­மா­ன­தொரு ஆட்­சி­யையே நடத்தி வரு­கிறார் .
என­வேதான் இந்த அர­சாங்­கத்­துக்கும் பிர­த­ம­ருக்கும் எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வரு­வ­தற்கு எதிர்க்­கட்சி தீர்­மா­னித்­தது. இது­வ­ரையில் இந்த பிரே­ர­ணையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 85 பேர் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர். மொத்­த­மாக 130 பேர் இதில் கைச்­சாத்­தி­டுவர். அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் சிலரும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி, பாராளுமன்றத்தில் இந்த பிரேரணையை சமர்ப்பிப்போம் என்றார்.

Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :