விசா இன்றி இலங்கை பயணிகள் இந்தியாவிற்குள் வர முடியாது என,இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஈ-விசா முறையை மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக கூறிய நடராஜன்,ஈ-விசா என்றால்,விசா இல்லாமலேயே இந்தியாவிற்கு செல்ல முடியும் என கருதி, பலர் விமான டிக்கெட் மாத்திரம் எடுத்து கொண்டு விமான நிலையம் வந்து, பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக தெரிவித்தார்.
எனவே மக்கள் ஈ- விசா முறையை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
