Featured Home (TOP)

Recent Comments

Tuesday, July 7, 2015

Unknown

நாட்டின் மோசமான அரசியல் கலாசாரத்தை மக்களே மாற்றியமைக்க வேண்டும்

நாடு போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் மத்­தி­யஸ்­தா­ன­மா­கிப் ­போ­யுள்ள நிலையில் போதைப் பொருள் வர்த்­த­கத்தில் ஈடு­படும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர்­களின் பத­வியே அனு­ம­திப்­பத்­திரம் இவ்­வாறு நாட்­டுக்கு பொருந்­தாத அர­சியல் கலா­ச­ரத்தை மாற்­றி­ய­மைக்க நாட்டின் அர­சியல் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்யும் பொது மக்­களால் மட்­டுமே முடியும் எனவும் சமூ­க நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் அமைப்­பாளர் மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார்.

தூய்­மை­யான அர­சியல் பிர­ஜை­களை உரு­வாக்­குவோம் என்ற தலைப்பில் கொழும்பு விஹா­ர­மா­தேவி பூங்கா உள்­ளக அரங்கில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற நாட­ளா­விய ரீதியில் மக்­க­ளிடம் பெறப்­பட்ட 10 இலட்சம் கையெ­ழுத்­துக்கள் அடங்­கிய புத்­த­கங்­களை அர­சியல் கட்சி பிர­தி­நி­தி­க­ளுக்கு வழங்கும் நிகழ்வில் பங்­கேற்று உரை­யாற்­றிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இந் நிகழ்வில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் எம்.பி.விஜித ஹேரத், முன்னாள் தலைவர் சோம­வன்ச அம­ர­சிங்க, ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊட­கப்­பேச்­சாளர் நிசாந்த வர்­ண­குல­சிங்க, ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்க, ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளாளர் எரான் விக்­கி­ர­ம­ரட்ண, அத்­து­ர­லியே ரத்ன தேரர், பிர­ஜைகள் முன்­ன­ணியின் செய­லாளர் ஜே.ஸ்ரீரங்கா உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
இதன் போது தொடர்ந்தும் உரை­யாற்­றிய மாது­லு­வாவே சோபித தேரர்,
எமது நாடு இன்று போதைப்­பொருள் வர்த்தகத்தின் மத்­தி­யஸ் ­தா­னமா­கி­யுள்­ளது. போதைப்­பொருள் வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­ப­வர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே என தெரிந்த போதும் அவர்கள் மீது எவ்­வித நட­வ­டிக்­கை­களும் இல்லை. இதனால் நாட்டின் பாரா­ளு­மன்றம் போதைப்­பொருள் வியா­பா­ரி­களால் நிரம்­பி­ப்போ­யி­ருந்­த­மை­யையே இது வரையில் எம்மால் காண முடிந்­தது.
போதைப்­பொருள் மத்­தி­யஸ்­தா­ன­மாக நாடு மாறி­யுள்­ள­மை­யினால் நாட்டின் அர­சியல் தலை­வர்கள் பலர் இவ்­வர்த்­த­கத்தில் ஈடு­படும் போது அவர்­க­ளுக்கு காப்­பா­கவும் அனு­ம­திப்­பத்­தி­ர­மா­கவும் தமது பத­வி­யி­னையே பயன்­ப­டுத்திக் கொண்­டனர்.ஆனால் அவர்கள் மக்கள் சேவை நிமித்­தமே பாரா­ளு­மன்­றத்­திற்கு அனு­ப்பப்பட்­டனர். அவர்­களை மக்கள் பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பினர்.
மக்கள் சேவைக்­காக பாரா­ளு­மன்றம் செல்­ப­வர்கள் ஊழல்­வா­தி­க­ளாக இருப்­பது முறை­யன்று. அதனால் மக்கள் இனி­வரும் காலங்­களில் பாரா­ளு­மன்­றத்­திற்கு அவ்­வா­றா­னவர் செல்­லா­தி­ருப்பதை உறுதி செய்­வது அவர்­களின் கட­மை­யாகும் அதற்­காக எதிர்­வரும் தேர்­தலின் போது நாட்டு மக்கள் தமது பிர­தி­நி­தி­களை கல்வி ஞான­முள்ள, அர­சியல் அறி­வு­மி­குந்த மக்­க­ளுக்கு சேவை­யாற்ற விரும்­பு­ப­வர்­க­ளையே பாரா­ளு­மன்றம் அனுப்ப முன்­னின்று செயற்­பட வேண்டும்.
அடிப்­படை அர­சியல் அறி­வில்­லா­த­வர்­களை பாரா­ளு­மன்றம் அனுப்­பி­யுள்­ள­மை­யி­னா­லேயே அண்­மையில் சீர்­தி­ருத்தம் செய்­யப்­பட்ட முக்­கிய சட்­ட­திட்­டங்கள் சில­வற்­றையும் 20 ஆவது திருத்­தத்­தையும் நாட்டு மக்கள் இழக்க நேரிட்­டது என்றார்.
virakesary.lk

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :