Featured Home (TOP)

Recent Comments

Friday, July 17, 2015

Unknown

குருநாகல் மாவட்ட சிறுபான்மை முஸ்லிம் பிரதிநிதி ரிஸ்வி ஜவஹர்சா ?

(மரியமின் புத்திரன்)

இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவம்  திட்டமிட்டு இல்லாமல் செய்யப்பட்டிருப்பது அம்மாவட்டத்தில் வாழும்  சிறுபான்மை முஸ்லிம் வாக்காளர்களை தலையைத்தடவி கண்ணைப் பிடுங்கிய செயலாகவே இருக்கின்றது.  

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின்  மாகாணசபை உறுப்பிணர் கௌரவ- ரிஸ்வி ஜவஹர்சா அவர்களை குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின்  பிரதிநிதியாக  யானைச் சிண்ணத்தில்  களமிறக்குவதாக வேட்பாளர் நியமனப்பட்டியலில் கடந்த பதினோராம் திகதியிரவு கடைசி ஆளாக  கையொப்பமிடப்பட்டும் இறுதி நேரத்தில் முக்கிய அமைச்சரொருவரினால் ரிஸ்வி ஜவஹர்சாவின் பெயர்மாற்றம் செய்யப்பட்டு வேறொருவரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டதானது குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் ஒருவரின் நாடாளுமன்ற நுழைவைத் தடுக்கும் செயலாகவே அமைகிறது. இது ஒருபோதும் மண்ணிக்கமுடியாத துரோகத்தனமான செயலாக அம்மக்களினால் பார்க்கப்படுகிறது. 

காலா காலமாக இம்மாவட்ட  முஸ்லீம்கள் இரு பிரதான கட்சிகளுக்குமே வாக்களித்துவரும் நிலையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் வளர்ச்சியை சகித்துக் கொள்ளமுடியாத சக்திகளின் கூட்டுமுயற்சியில் வடமாகாண முஸ்லிம் அமைச்சர் சேர்ந்துகொண்டதன் மூலம்  இம்மாவட்ட சிறுபான்மை முஸ்லீம்களுக்கு துரோகமிழைத்துவிட்டார்  என்றே கூறப்படுகிறது.
    
வடமேல் மாகாணசபை உறுப்பினராகவிருந்து தன்னாலியன்றளவு பின்தங்கிய கிராமங்களுக்கு சேவை செய்ததன்மூலம் அம்மக்கள் மத்தியில் பேரபிமானம் பெற்ற  இளம் அரசியல்வாதியாகவும் சமூகசேவகராகவும் ரிஸ்வி ஜவஹர்சா அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார். இவ்வாறிருக்க குருநாகல் மாவட்டத்திற்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் நியமனப் பட்டியலிலிருந்து  அதன் தலைவர், செயலாளருக்கும் தெரியாமல் தன்னிச்சையாக  அம்மாவட்டத்தின் அமைச்சர் பெயரை நீக்கியமையானதும் வேரொருவரின் பெயரை இடம்பெறச் செய்துள்ளதும் பலத்த சந்தேகத்தையளிக்கும் அதேவேளை இச்செயல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினதும் அதன் தலைமையினதும் தரத்தை மீண்டுமொருதரம் உரசிப்பார்க்கும் செயலாகும். இதுவிடயத்தில் முஸ்லீம்களின் அதிபலமுடை கட்சியென்றவகையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மெத்தனப்போக்கை கைவிட்டு காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்கையாலாகாத்தனத்திற்கு  நாட்டின் மக்களபிமானம்பெற்ற கட்சியென்ற வகையில் ஐ.தே.க.வெட்கித்தலைகுனிவதோடு நட்டாற்றில் விடப்பட்டிருக்கும் இம்மாவட்ட மக்களுக்கான முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை மாற்றுவழியிலேனும் வழங்கி நாட்டில் ஐக்கியத்தையும், நிலையான சமாதானத்தையும் நிலைநாட்டும் அரசின் நல்லாட்சிக்கான பயணத்தில் மக்களை யானைச் சின்னத்திற்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருவது ஐதே.க.யின் தலைவரும் நல்லாட்சி நிலவும் நாட்டின் பிரதமருமான கௌரவ- ரனில் விக்கிரமசிங்க அவர்களின் தலையாய கடைமையுமாகும்.

இந்தவிடயத்தில் உரியவிசாரனை செய்து நீதியை பெற்றுத்தராதவிடத்து பாதிக்கப்பட்ட மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களிப்பை புறக்கனித்து ஒதுங்கிக்கொள்வதா ? அல்லது இருபெரும்பான்மை கட்சிகளையும் நிராகரித்து மூன்றாவது கட்சியொன்றின் கரங்களைப் பலப்படுத்துவதா?


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :