Featured Home (TOP)

Recent Comments

Monday, July 27, 2015

Unknown

தமிழர் தாய­கத்தை உரு­வாக்கும் நிலைப்பாட்டை மு.கா.வரவேற்கின்றது : ஹசன்


வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாய­கத்தை உரு­வாக்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல்விஞ்­ஞா­பனம் வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். இந்த நிலைப்­பாட்டை வெறும் பேச்சில் மட்டும் இல்­லாது தமிழ், முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் பேச்­சு­வார்த்தை­களின் மூலம் வென்­றெ­டுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­தது.

இரண்டு சமூ­கத்­துக்கும் இடையில் எவ்­வித முரண்­பா­டு­களும் ஏற்­ப­டாது,


முஸ்லிம் மக்­களின் தனித்­துவம், இருப்பு, அவர்­களின் உரி­மைகள் என அனைத்து விட­யங்­க­ளிலும் சம உரிமை வழங்­கப்­ப­டு­வதும், அவர்­க­ளது நிலங்கள் பாது­காக்­கப்­ப­டு­வதும் உறுதிப் படுத்­தப்­பட வேண்டும் எனவும் முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­தது.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிடப் பட்­டி­ருக்கும் வடக்கு கிழக்கு இணைந்த தமி­ழக தாயக் கோரிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ஹசன் அலி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
வடக்கு, கிழக்கு இணைந்த தமி­ழக தாய­கத்தை உரு­வாக்­கு­வதே தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால நிலைப்­பா­டாகும். எமது எதிர்­பார்ப்பும் அது­வே­யாகும். வடக்கு, கிழக்கு இணைந்த தாய­கத்தை உரு­வாக்­கு­வது என்ற நிலைப்­பாட்டில் இருந்து நாம் ஒரு­போதும் மாற­வில்லை. ஆனால் தமிழ் பேசும் மக்கள் என்ற கட்­ட­மைப்பில் தமிழ் மக்­க­ளைப்போல் முஸ்லிம் மக்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இந்த இரண்டு சமூ­கமும் ஒன்­றி­ணைந்து வடக்­கையும் கிழக்­கையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த வேண்டும் என்­பதே நியா­ய­மான நிலைப்­பா­டாகும். குறிப்­பாக இரண்டு சமூ­கங்களுக்கும் இடையில் எவ்­வித முரண்­பா­டு­களும் ஏற்­ப­டாது, முஸ்லிம் மக்­களின் தனித்­துவம், இருப்பு, அவர்­களின் உரி­மைகள் என அனைத்து விட­யங்­க­ளிலும் சம உரிமை வழங்­கப்­ப­டு­வதும், அவர்­க­ளது நிலங்கள் பாது­காக்­கப்­ப­டு­வதும் உறுதிப் படுத்­தப்­பட வேண்டும்.
ஆனால் தமிழ் முஸ்லிம் மக்­களின் இந்த நிலை­பாட்டில் பெரும்­பான்மை அர­சியல் தலை­மை­களின் தலை­யீ­டு­களும், அவர்­க­ளது மத்­தி­யஸ்­தமும் ஏற்­பட்டு வரு­கின்­றது. தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைக்­கான இவர்கள் தலை­யி­டு­வது முழு­மை­யான அர­சியல் சுய­ந­லத்­துக்­காக மட்­டு­மே­யாகும். அதை நம்பி எமது தலை­மைகள் ஏமாந்­து­போ­வதே சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழர் தலை­மை­களும், முஸ்லிம் தலை­மை­களும் இணைக்­கப்­பட வேண்டும்.
வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­ணைத்து தமிழர் தாய­கத்தை உரு­வாக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தயா­ராக இருக்­கின்­றமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். தமிழர் தாய­கத்தை உரு­வாக்கும் வகையில் தமிழ் தலை­மை­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த முஸ்லிம் தலை­மைகள் தயா­ரா­கவே உள்­ளது. தமிழ் மக்­களை முழு­மை­யாக பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முக்­கிய தமிழ் கட்­சி­களும், முஸ்லிம் மக்­களை முழு­மை­யாக பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முக்­கிய முஸ்லிம் கட்­சி­களும் இணைந்து பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக வேண்டும். நிரந்­தரத் தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்ளும் வகையில் பேச்­சு­வார்த்­தைக்கு செல்ல வேண்டும்.
அதேபோல் வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­னைத்து தமிழர் தாய­கத்தை உரு­வாக்­கு­வ­தென்­பது சாதா­ரண விடயம் அல்ல. தமிழ் முஸ்லிம் மக்கள் மத்­தியில் விட்­டுக்­கொ­டுப்­பையும் சுய உரிமைகளையும் பலப்படுத்துவதுடன் விட்டுக்கொடுப்பு அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் அரசியல் நடவடிக்கைகளை சமமாக அனுபவிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் அதுவே சாதகமான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.
virakesary.lk

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :