Featured Home (TOP)

Recent Comments

Thursday, July 16, 2015

Unknown

திரு­டர்­க­ளுடன் மஹிந்த மீண்டும் போட்­டி­யி­டு­கின்றார் : அஸாத்சாலி

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்யப் போவது மோச­டிக்­கா­ரர்­க­ளையா? அல்­லது நேர்­மை­யான திற­மை­யா­ன­வர்­க­ளையா? என்­பதை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும். 

திரு­டர்­க­ளுக்கும் மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­த­மைக்கு மன்­னிப்பு கோரிய மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அவர்­க­ளு­டனே தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தைப் பகிர்ந்து ஐக்­கி­யப்­படும் இயக்கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த செய்­தி­யாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம் பெற்­றது. இதன் போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஊழல், மோச­டிக்­கா­ரர்கள் மற்றும் போதைப் பொரு­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களின் பெயர்கள் சுதந்­திரக் கட்சி வேட்பு மனுவில் இடம்­பெ­றாது என ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். என்­றாலும் தற்­போது அப்­ப­டி­யா­ன­வர்கள் எவ்­வாறு இடம் பெற்­றார்கள் என்­பதை ஜனா­தி­பதி நாட்டு மக்­க­ளுக்குத் தெளி­வாகக் கூறி­யுள்ளார்.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் சுசில் பிரேம் ஜயந்­தவை அச்­சு­றுத்­தியே மஹிந்த ராஜபக்ஷ உட்­பட மோச­டிக்­கா­ரர்­களின் பெயர்கள் வேட்­பு­ம­னுவில் இடம்­பெற்­றுள்­ளன. சுசில் பிரேம்­ஜ­யந்­தவும் தன்­னு­டைய குற்­றங்­களை மறைத்துக் கொள்­வ­தற்கு அதற்கு அனு­ம­தித்­துள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக் ஷ தனது மோச­டி­களை மறைப்­ப­தற்கும் தனக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கும் போது பாரா­ளு­மன்றச் சிறப்­பு­ரி­மையைப் பயன்­ப­டுத்­தவும் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார்.
அவர் பாரா­ளு­மன்றம் சென்­றாலும் கூடி­ய­காலம் இருக்க முடி­யாது. அவ­ருக்கு எதி­ராக பாரிய குற்றச் சாட்­டுக்கள் இருக்­கின்­றன. அவை விசா­ரிக்­கப்­படும் பட்­சத்தில் அவர் சிறைச்­சா­லைக்கு செல்வார்.
இந்த நாட்டை ஆட்­சி­பு­ரிந்த சகல ஜனா­தி­ப­தி­க­ளுக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் கூறப்­பட்­டன. என்­றாலும், அவர்­க­ளது குடும்­பங்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் இருக்­க­வில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவர் குடும்­பத்­தினர் மீதும் பாரிய குற்­றச்­சாட்­டுக்கள் இருக்­கின்­றன.
கடந்த காலத்தில் ஊழல், மோச­டி­களில் தொடர்­பு­பட்­ட­வர்கள் அனை­வரும் களமிறங்­கி­யுள்­ளனர். இதனை சிறந்­த­தொரு சந்­தர்ப்­ப­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் நல்­ல­தொரு பாடத்தைக் கற்­பிக்க வேண்டும். அத்­துடன் இவர்­க­ளுக்கு துணை­யாக இருந்த சுசில் பிரேம் ஜயந்­த­வுக்கும் கொழும்பு மாவட்ட மக்கள் பாடம் கற்­பிக்க வேண்டும்.
மேலும் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இலங்கைப் போக்­கு­வ­ரத்துச் சபைக்கு சொந்­த­மான பஸ்­களை பயன்­ப­டுத்­தி­ய­மைக்­காக கொடுக்க இருந்த கடன்­களை செலுத்­தி­ய­தாக அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா அண்­மையில் கூறி­யுள்ளார். ஆனால் இது­வரை கடன்­களை செலுத்தவில்லை. முடியுமானால் அதற்குரிய பற்றுச் சீட்டுக்களுடன் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும்.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வது ஊழல், மோசடிக்காரர்களையா அல்லது நேர்மையானவர்களையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

virakesary.lk

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :