உலக தற்கொலை தடுப்புத் தினம் இன்றாகும். கடந்த ஆண்டு (2014) இலங்கையில் 3164 தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முன்னைய வருடமான 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 150 குறைந்துள்ளது.
இலங்கையில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை குறைந்த போதிலும் தற்கொலைக்கு முயற்சி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் துணைபுரிகின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவலுக்கமைய ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இது நூற்றுக்கு 11.4 சதவீமாகும்.
