முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு கடூழிய சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கமைய குறித்த குண்டுத்தாக்குதலுக்கு உதவி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட வேலாயுதம் வரதராஜ் என்பவருக்கு 290 வருட சிறைத்தண்டனையும், சந்திரா ரகுபதி என்பவருக்கு 300 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-virakesary
