மழைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கொழும்பு மாநகரில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகரின் 10 வீதமான வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் காணப்படுவதாக பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கொழும்பு மாநகரிலும் விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
