மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை உலகிலேயே மிகவும் புதியதொரு பொறிமுறையில் முன்னெடுக்கவுள்ளோம். தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினை பார்க்கிலும் சிறப்பானதொரு
பொறிமுறையைக் கொண்டு இலங்கையின் தரத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொறிமுறையைக் கொண்டு இலங்கையின் தரத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாம் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினருக்கு துரோகம் இழைக்கமாட்டோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தூக்கு கயிறிலிருந்து நாமே காப்பாற்றினோம் மேலும் மனித உரிமைகள் பேரவை நிகழ்ச்சி நிரலிலிருந்து இலங்கையை முழுமையாக அகற்றிவிட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். சமாதானத்திற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
மனித உரிமை மீறல் விவகாரத்திலிருந்து இலங்கையை பாதுகாக்கும் வகையிலான அமெரிக்காவின் பிரேரணையை இனவாதிகள் எதிர்க்கின்றனர்.சர்வதேச குற்றச்சாட்டுகளிலிருந்து நாட்டை மீட்க வேண் டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது நானோ ,அமைச்சரவையோ எடுக்கவில்லை. ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்களே இவ்வாறு ஆணை வழங்கினர்.
நாம் முன்னெடுத்த நல்லிணக்க மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. எங்கள் மீது சர்வதேசம் நம்பிக்கை கொண்டுள்ளது. இதற்கமைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை நிகழச்சி நிரலில் இருந்து இலங்கை விவகாரத்தை அகற்றியுள்ளோம். இனிமேல் இலங்கை விவகாரம் மனித உரிமை நிகழச்சி நிரலில் சேர்க்கப்படாது.
எனினும் இரண்டு தரப்பிலும் உள்ள இனவாதிகள் மனித உரிமை விவகாரம் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். சர்வதேசத்தின் குற்றச்சாட்டை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் சிறப்பான முறையில் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் விரோதத்திற்கு நாம் உள்ளாக நேரிடும். அதுமாத்திரமின்றி மக்களும் எம்மை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்து விடுவர்.
எனினும் இரண்டு தரப்பிலும் உள்ள இனவாதிகள் மனித உரிமை விவகாரம் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். சர்வதேசத்தின் குற்றச்சாட்டை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் சிறப்பான முறையில் முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் விரோதத்திற்கு நாம் உள்ளாக நேரிடும். அதுமாத்திரமின்றி மக்களும் எம்மை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்து விடுவர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையினாலேயே இந்த நிலைமைக்கு இலங்கையினால் முகங்கொடுக்க நேரிட்டது. இதனால் சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு உள்ளாக வேண்டியேற்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ தனக்காக மாட்டிக்ககொண்ட தூக்கு கயிறிலிருந்து நாமே மஹிந்தவை காப்பாற்றியுள்ளோம். பிச்சைக்காரனின் காயங்களை எம்மால் ஆற்றமுடிந்துள்ளது.
உலகிலேயே மிகவும் புதிய பொறிமுறையில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினை பார்க்கிலும் சிறப்பானதாக பொறிமுறையினை கொண்டு இலங்கையின் தரத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவோம்.
இரண்டு தரப்பினராலும் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உண்மை கண்டறிய வேண்டும். காணமல் போனோர் தொடர்பில் விசேட காரியலாயம் நிறுவப்படும். மேலும் இது தொடர்பில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ,அதன் தீர்மானங்கள் மத தலைவர்கள் உள்ளடங்கிய கருணை சபைக்கு செல்லும். அவர்களே அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பார்கள். உலகிலேயே புதியதொரு பொறிமுறையை நாம் ஏற்படுத்தவுள்ளோம்.
இதனை மஹிந்த ராஜபக்ஷ அன்றே செய்திருந்தால் இவ்வளவு தூரம் நாம் பயணிக்க வேண்டியதில்லை. நாம் வித்தியாசமான முறையில் சர்வதேசத்தை அனுகினோம். இனவாதத்தை கைவிட்டு நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியேற்பட்டுள்ளது. இவ்வாறு சென்றால் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது போய்விடுவோ என்ற அச்சத்தினாலேயே எதிர்க்கட்சியினர் எமது செயற்பாடுகளை எதிர்க்கின்றனர் என்றார்.
