Featured Home (TOP)

Recent Comments

Thursday, October 29, 2015

avathani Media Network

மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்களின் நூல்கள் மாநகர சபையினால் கோரப்படுகின்றன.


மட்டக்களப்பு  மாநகரசபையினால் மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்களின்
புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை
மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி மட்டக்களப்பு
பொது நூலகத்தில் 31.10.2015 – 01.11.2015 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வை மட்டக்களப்பு பொது நூலகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம்
ஆகியன இணைந்து நடாத்தவுள்ளன.

இக்கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட
எழுத்தாளர்களின் நூல்கள் மாநகர சபையினால் கோரப்படுகின்றன. வழங்கப்படும்
நூல்கள் கண்காட்ச்சியின்  முடிவில் திருப்பி வழங்கப்படும்.

நூல்களை வழங்க விருப்புவோர் மட்டக்களப்பு பொது நூலகத்தில் 30.10.2015
இற்கு முன்னதாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

மேலதிக விபரங்களுக்கு :
065 2222275 – மாநகர சபையோடு தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகிறது..

(ஜுனைட்.எம்.பஹ்த்)

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :