மீட்டியாகொடை – களுவரபெத்த பகுதியில் தனது 78 வயதுடைய பாட்டியை குளியலறையில் சிறைவைத்திருந்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த மூதாட்டிக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளதுடன் அதில் ஒரு பிள்ளையின் மகளே இவ்வாறு தனது பாட்டியை சிறையிட்டு வைத்திருந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த பேத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த மூதாட்டியின் மற்றுமொறு மகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
