Featured Home (TOP)

Recent Comments

Saturday, May 2, 2015

Unknown

மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் மரணம்

கால்­பந்து போட்­டி­யின்­போது மார­டைப்பு ஏற்­பட்­டதால் மைதா­னத்தில் மயங்கி விழுந்த பெல்­ஜியம் நாட்டின் இளம் கால்­பந்து வீரர் கிரி­கோரி மெர்டன்ஸ் சிகிச்சை பல­னின்றி உயிரிழந்தார்.
21 வய­துக்குட்பட்­டோ­ருக்­கான பெல்ஜியம் தேசிய அணியில் இடம்­பெற்­றி­ருந்த துடிப்­பான வீரர் கிரி­கோரி மெர்டன்ஸ். தேசிய அணியில் சில போட்­டி­க­ளிலே விளை­யாடியிருந்­தாலும், செர்கிள் புரூகஸ், லோகிரன் ஆகிய கழகங்களுக்காக சுமார் 100 போட்­டி­களில் விளை­யா­டிய அனு­பவம் பெற்­றவர்.
இவர் கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற ரிசர்வ் அணி போட்­டியில் விளை­யாடிக் கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென மார­டைப்பு ஏற்­பட்­டது.
இதனால் நிலை­கு­லைந்த அவர் மைதா­னத்­தி­லேயே மயங்கி விழுந்தார். உடனே வைத்தியர்கள் விரைந்து சென்று அவ­ருக்கு முத­லு­தவி சிகிச்சை அளித்து. மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றனர். 
கோமா நிலைக்கு சென்ற அவ­ருக்கு உயிர்­காக்கும் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்­கப்­பட்டு வந்­தது.எனினும் அவ­ரது உடல்­நிலை மோச­ம­டைந்­தது. உயிர்­பி­ழைக்க வாய்ப்­பில்லை என்று வைத்தியர் கள் கூறி­ய­தை­ய­டுத்து, செயற்கை சுவா­சத்தை நிறுத்த உற­வி­னர்கள் சம்­மதம் தெரி­வித்­தனர். இதனால் நேற்று மாலை அவர் உயிர் பிரிந்­தது.

Read More
Unknown

"தொழிலாளர்களை சுரண்டுவதற்கே தொழிலாளர் தினமும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது": மே தின நிகழ்வில் அப்துர் ரஹ்மான்

(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)


"மக்களைச் சுரண்டுவதற்கு அரசியல் பயன்படுத்தப்படுவதைப் போலவேதான் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்காக தொழிலாளர் தினமும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது" என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
நேற்று காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் மேதின நிகழ்வில் விஷேட அதிதியாக NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
Read More
Unknown

காத்தான்குடி ஆட்டோ சங்க மேதின நிகழ்வில் NFGGயின் தவிசாளர் விஷேட அதிதியாகக் கலந்துகொண்டார்

(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கம் நடத்திய மே தின ஊவலம் மற்றும் கூட்டம் என்பன நேற்று (1.05.2015) இடம்பெற்றது.

காத்தான்குடி போலிஸ் நிலைய முன்றலில் இருந்து ஆரம்பமான மே தின ஊர்வலம் கடற்கரை வீதியில் அமைந்திருக்கும் ஆட்டோ சாரதிகள் சங்க காரியாலயத்தின் முன்னால் நிறைவுற்று காரியாலயத்தில் மே தின கூட்டம் இடம்பெற்றது.
Read More
Unknown

NFGGயின் மேதின நிகழ்வும் தொழிலாளர் கௌரவிப்பு - படங்கள்

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி



நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்வும் தொழிலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (01.05.2015) அதன் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.
NFGGயின் காத்தான்குடி பிரதேச செயற்குழு செயலாளர் SMM.பசீர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MHAM.மிஹ்ழார், NFGGயின் பிராந்திய செயற்குழு அமீர் MMM.ஜனூப், முன்னாள் நகரசபை உறுப்பினர் AGM.ஹாறூன் மற்றும் ஐ.தே.க. காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா, ALA.கையூம் ஆசிரியர், சமுர்த்தி வீடமைப்புப் பிரதியமைச்சரின் காத்தான்குடி இணைப்புச் செயலாளர் அல்ஹாஜ் AJM.மாஹிர் உட்பட உலமாக்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Read More