-மரியமின் புத்திரன்.-
இக்ரஹ் கல்வி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்டு இம்முறை தரம்-6ல் கல்வி பயிலும் மாணவச் செல்வங்களுக்கும், க.பொ.த. உயர்தரத்தில் சித்திபெற்று இம்முறை பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்குமான "வழிகாட்டுகை விழாவும், பரிசளிப்பும் பொத்துவில் "இக்ரஹ் கல்வி நிலையத்தில்" அதன் பணிப்பாளர் றாசுடீன் ஆசிரியர் அவர்களினால் நடாத்தப்பட்டது.
பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்த இவ்விழாவில் பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர்களும், வைத்தியர்கள். ஆசிரியர்கள் , சமூக சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
படமும் தகவலும்
-மரியமின் புத்திரன்.