முகத்தை முழுமையான மறைக்கக் கூடிய தலைகவசங்களை தடைசெய்வது குறித்த சட்டம் தற்போதைக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் மேலும் ஆராயப்பட்டு இறுதி தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும் பொது ஒழுங்குகள் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க கேசரிக்கு தெரிவித்தார்.
பொது மக்கள் பலரிடம் இருந்து கிடைத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைவாகவே இவ்வாறு தற்காலிகமாக அதனை இடை நிறுத்தி விட்டு அந்த தடை தொடர்பில் மேலும் ஆராய தீர்மானித்ததாகவும் அது குறித்து பொலிஸ் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் குறிப்பிட்டார்.
இந்த சட்ட அமுலாக்கத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். சுய பாதுகாப்பு காரணிகளுக்காகவே முகத்தை முழுமையாக மறைக்கக்கூடிய தலைகவசம் அணிவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் குறித்த சட்டத்தை தற்போதைக்கு அமுல்படுத்த வேண்டாம் என உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் அச்சட்டத்தை அமுல் செய்வதா? இல்லையா என கலந்துரையாடல்களை நடத்தி இறுதி தீர்வு எட்டப்படும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.
Source - Virakesary
