கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதாக வாக்களிக்கப்பட்ட இரண்டாயிரம் ரூபா மாதாந்தக் கொடுப்பனவுக்குப் பகரமாக போசனை உலர் உணவுப் பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் தாய் சேய் நல மருத்துவ நிலையத்தில் பதிவு செய்த பின்னர் இந்த போசனை உணவுப் பொதியைப் பெறத் தகுதி பெறுவார்கள் எனவும் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
(ஜுனைட்.எம்.பஹத்)
