ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வரலாற்றில் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி காலத்தில் தான் முஸ்லிம்கள் பெருமளவில் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தார்கள் என களுத்துறை மாவட்ட வேட்பாளரும் பேருவளை முன்னாள் நகரசபைத் தலைவருமான மில்பர் கபூர் தெரிவித்தார்.
ஆனால் கடந்த வருடம் அளுத்கம தர்கா நகரில் ஏற்பட்ட அனர்த்த சேத அழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கு எண்பது வீத முஸ்லிம்கள் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து நல்லாட்சியை ஏற்படுத்தினார்களே தவிர மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்கவில்லை.
அவ்வாறு பெருமளவில் முஸ்லிம்கள் வாக்களித்தும் தர்கா நகர் சேத அனர்த்த அழிவு தொடர்பாக இன்று வரை இந்த நல்லாட்சியில் பொலிஸ் விசாரணை குழு, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை ஒன்றை நியமித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்போர் ஏன் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
அவ்வாறு பெருமளவில் முஸ்லிம்கள் வாக்களித்தும் தர்கா நகர் சேத அனர்த்த அழிவு தொடர்பாக இன்று வரை இந்த நல்லாட்சியில் பொலிஸ் விசாரணை குழு, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை ஒன்றை நியமித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்போர் ஏன் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
பாணந்துறை தொட்டவத்தை மாஹோ முற்சந்தியில் கடந்த சனிக்கிழமை மாலை இடம் பெற்ற தேர்தல் பிரசார மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். பாணந்துறை பிரதேசத் தலைவர் இபாஸ் நபுஹான் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் மில்பர் கபூர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தர்கா நகர் சம்பவத்தில் நூறு வீடுகளை எரித்தனர், பத்து வியாபார தளங்களை தீக்கரையாக்கினார்கள், இரண்டு உயிர்களை பலியெடுத்தனர் இவ்வாறு நடைபெற்றும் இப் புதிய நல்லாட்சியில் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்கும் மர்மம் என்ன?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் புதிய நல்லாட்சிக்கு ஆறுமாத காலம் ஆகியும் தர்கா நகர் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யவில்லை. ஆனால் இந்த நல்லாட்சியில் குற்றவாளிகளை கைது செய்யவே மாட்டார்கள் இதற்கு பிறகும் இனியும் விசாரணை மேற்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு விசாரணை செய்து குற்றவாளிகளை கைதுசெய்யாமல் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? இதை செய்தவர்கள் அவர்களே தான்.
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிக்க சூழ்ச்சி செய்து இதற்கு மஹிந்த சம்பந்தம், கோத்தபாய ஆட்கள், இராணுவத்தினர் என முஸ்லிம்களை திசைதிருப்பினர். அது தான் அவர்களின் சூழ்ச்சி.
ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, பஷில் ராஜபக் ஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகள் நான்கு ஐந்து வருடங்கள் பழமையானவை அவர்களின் மீது விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைக்க முடியுமென்றால் ஒரு வருடத்திற்கு முன் இடம்பெற்ற தர்கா நகர் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விசாரணை மேற்கொண்டு ஏன் கைது செய்து சிறையில் அடைக்காமல் இருக்கின்றார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு செய்த சூழ்ச்சி இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜித சேனரத்னவுக்கு களுத்துறை மாவட்டத்தில் ஐ.தே.க.கட்சியின் சிங்கள இன மக்களின் வாக்குகள் இல்லை. குரங்கு போல் கட்சிகளுக்கு பாய்ந்து தாவி செல்வது சிங்கள வாக்காளர்களுக்கு தெரியும் .
இதை ஏற்கனவே அறிந்து கொண்ட ராஜித சேனரத்ன களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளை பெறத் திட்டம் தீட்டினார். அதுதான் அவரின் சூழ்ச்சி .
பொதுபல சேனா தலைவர் ஞானசார தேரர் களுத்துறை மாவட்டத்தில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற போட்டியிடுகிறார். ராஜித சேனாரத்தனவை விமர்சித்து பாடம் புகட்டவே இதனால் ராஜித சேனாரத்ன களுத்துறை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முயல்கிறார்.
இவர் தான் பெரிய சூழ்ச்சிகாரர். எனவே களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் ராஜித சேனாரத்னவுக்கு ஏமாந்து போய்விட வேண்டாம். அவர் முஸ்லிம்களின் தலைவர் அல்ல.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் சென்ற முஸ்லிம் தலைவர்கள் இப்போது திரும்ப மஹிந்த ராஜபக் ஷவை சூழ்ந்துக் கொண்டு மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் 1994 ஆம் ஆண்டு எனது பாட்டன் காலஞ் சென்ற பளீல் ஹாஜியாரை இம் மாவட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிப் பெறச் செய்தார்கள்.
அதே போன்று எனது மாமா மர்ஜான் பளீலுக்கும் பெரும் பலத்தை கொடுத்தீர்கள். அதே போன்று இம்மாவட்ட மக்கள் இருமடங்கு வாக்கு பலத்தை தந்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
32 வயதையுடைய நான் பேருவளை நகரசபை தலைவர் பதவிக் காலத்தில் 862 மில்லியன் ரூபா நிதி மூலம் பேருவளை பிரதேசத்தில் குன்றும் குழியுமாக இருந்த வீதிகளுக்கு ‘காபர்ட்’ வீதியாக மாற்றியதுடன் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டேன்.
நான் யாருக்கும் பயப்படமாட்டேன். எனது சொந்த நிதியை பயன்படுத்தி அரசியல் செய்கிறேன்.
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் நான் ஒருவன் மட்டுமே.
களுத்துறை மாவட்டம் மாத்திரமல்ல இரத்தினபுரி, கம்பஹா, காலி, மாத்தறை ஆகிய இம்மாவட்டங்களில் ஏக முஸ்லிம் வேட்பாளராகவே களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன்.
எனவே இத் தேர்தலில் மாவட்ட மக்கள் அனைவரும் அணி திரண்டு அமோக வாக்குகளால் வெற்றிப் பெறச் செய்யுமாறு வேண்டுகிறேன்.
நான் பாராளுமன்றத்துக்கு தெரிவானால் பாணந்துறை தொட்டவத்தை பிரதேசத்தை சிங்கப்பூர் பிரதேசமாக மாற்றியமைப்பேன் என்றார்.
இவ்வாறு விசாரணை செய்து குற்றவாளிகளை கைதுசெய்யாமல் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? இதை செய்தவர்கள் அவர்களே தான்.
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிக்க சூழ்ச்சி செய்து இதற்கு மஹிந்த சம்பந்தம், கோத்தபாய ஆட்கள், இராணுவத்தினர் என முஸ்லிம்களை திசைதிருப்பினர். அது தான் அவர்களின் சூழ்ச்சி.
ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, பஷில் ராஜபக் ஷ ஆகியோரின் குற்றச்சாட்டுகள் நான்கு ஐந்து வருடங்கள் பழமையானவை அவர்களின் மீது விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைக்க முடியுமென்றால் ஒரு வருடத்திற்கு முன் இடம்பெற்ற தர்கா நகர் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விசாரணை மேற்கொண்டு ஏன் கைது செய்து சிறையில் அடைக்காமல் இருக்கின்றார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு செய்த சூழ்ச்சி இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜித சேனரத்னவுக்கு களுத்துறை மாவட்டத்தில் ஐ.தே.க.கட்சியின் சிங்கள இன மக்களின் வாக்குகள் இல்லை. குரங்கு போல் கட்சிகளுக்கு பாய்ந்து தாவி செல்வது சிங்கள வாக்காளர்களுக்கு தெரியும் .
இதை ஏற்கனவே அறிந்து கொண்ட ராஜித சேனரத்ன களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளை பெறத் திட்டம் தீட்டினார். அதுதான் அவரின் சூழ்ச்சி .
பொதுபல சேனா தலைவர் ஞானசார தேரர் களுத்துறை மாவட்டத்தில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற போட்டியிடுகிறார். ராஜித சேனாரத்தனவை விமர்சித்து பாடம் புகட்டவே இதனால் ராஜித சேனாரத்ன களுத்துறை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முயல்கிறார்.
இவர் தான் பெரிய சூழ்ச்சிகாரர். எனவே களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் ராஜித சேனாரத்னவுக்கு ஏமாந்து போய்விட வேண்டாம். அவர் முஸ்லிம்களின் தலைவர் அல்ல.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் சென்ற முஸ்லிம் தலைவர்கள் இப்போது திரும்ப மஹிந்த ராஜபக் ஷவை சூழ்ந்துக் கொண்டு மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் 1994 ஆம் ஆண்டு எனது பாட்டன் காலஞ் சென்ற பளீல் ஹாஜியாரை இம் மாவட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிப் பெறச் செய்தார்கள்.
அதே போன்று எனது மாமா மர்ஜான் பளீலுக்கும் பெரும் பலத்தை கொடுத்தீர்கள். அதே போன்று இம்மாவட்ட மக்கள் இருமடங்கு வாக்கு பலத்தை தந்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
32 வயதையுடைய நான் பேருவளை நகரசபை தலைவர் பதவிக் காலத்தில் 862 மில்லியன் ரூபா நிதி மூலம் பேருவளை பிரதேசத்தில் குன்றும் குழியுமாக இருந்த வீதிகளுக்கு ‘காபர்ட்’ வீதியாக மாற்றியதுடன் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டேன்.
நான் யாருக்கும் பயப்படமாட்டேன். எனது சொந்த நிதியை பயன்படுத்தி அரசியல் செய்கிறேன்.
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் நான் ஒருவன் மட்டுமே.
களுத்துறை மாவட்டம் மாத்திரமல்ல இரத்தினபுரி, கம்பஹா, காலி, மாத்தறை ஆகிய இம்மாவட்டங்களில் ஏக முஸ்லிம் வேட்பாளராகவே களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன்.
எனவே இத் தேர்தலில் மாவட்ட மக்கள் அனைவரும் அணி திரண்டு அமோக வாக்குகளால் வெற்றிப் பெறச் செய்யுமாறு வேண்டுகிறேன்.
நான் பாராளுமன்றத்துக்கு தெரிவானால் பாணந்துறை தொட்டவத்தை பிரதேசத்தை சிங்கப்பூர் பிரதேசமாக மாற்றியமைப்பேன் என்றார்.
