( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் அனுசரனையிலான சம்மாந்துறைப் பிரதேச பாலர் பகல் பராமரிப்பு நிலையங்களின் 'சிறுவர் தினவிழா' இன்று சம்மாந்தறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
சம்மாந்துறை சிறுவர் நன்நடத்தை அலகுப் பொறுப்பதிகாரி எம்.என்.முஹம்மட் றபாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் பிரதம அதிதியாகவும்இ முன்னாள் அம்பாரை மாவட்ட சிறுவர் நன்நடத்தை இணைப்பதிகாரி ஏ.உதுமாலெப்பை விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிந்தவூர்இ காரைதீவுஇ சம்மாந்துறைப் பிரதேசங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட பாலர் பகல் பராமரிப்பு நிலையங்களின் சிறுவர்களது கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றன. பங்கு கொண்ட அனைத்துச் சிறுவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.