Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 7, 2015

Unknown

மண்முனைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய பூர்வீக காணிகளின் நிலை...? தெளிவுபடுத்துகிறாா் சிப்லி பாறூக்


(ஏ.எல்.டீன் பைரூஸ். ஜுனைட் .எம்.பஹ்த் )

அண்மைக்காலமாக மண்முனைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய பூர்வீக காணிகளென்பது எடுப்பார் கைப்பிள்ளை போன்று  கையாளப்படுவதை எங்களால் அவதானிக்க முடிகின்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட   சிகரம் பிரதேசத்தில் அமைந்துள்ள நூறு ஆண்டுகளுக்கு மேலான முஸ்லிம்களுக்கு சொந்தமான பூர்வீக காணியில் உரிமையாளர்கள் தங்களது வீடுகளை அமைப்பதற்கு முயலுகின்ற போது ஆரம்பத்திலேயே எந்த அடிப்படையும் இல்லாமல்  இதனை அரச காணியென்று வாதிட்டனர், இதன் பின்னர் அக்காணியானது தனியார் காணியென உறுதிப்படுத்தப்பட்டு அக் காணியில் கட்டிட நிர்மாணத்திற்குரிய அனுமதிகள் மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளரினால் வழங்கப்பட்டன. 
Read More
Unknown

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க அவர்களை NFGG சந்தித்துக் கலந்துரையாடியது

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG), நேற்று (06.04.2015) மாலை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர்  MM.அப்துர் ரஹ்மான், பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், அதன் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் நளீமி, பிரச்சார செயலாளர் சிறாஜ் மஷ்ஹூர் மற்றும் Dr.ILM.றிபாஸ், ஹனான், முஜீப், ரஷீத் உள்ளிட்ட NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
Read More
Unknown

மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம்

40 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் 4, 1975-ம் ஆண்டு சியேட்டிலில் உள்ள லேக்ஸைடு பள்ளியில் படித்து வந்த நண்பர்களான பில்கேட்ஸ், பால் ஆலன் ஆகியோர் கூட்டணியில் உருவானதே மைக்ரோசாப்ட். 

அப்போது பில்கேட்ஸூக்கு வயது 19, ஆலனுக்கு வயது 22. 40 ஆண்டுகால பயணத்தில் உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமாக மைக்ரோசாப்ட் பல சாதனைகளை பதிவு செய்துள்ளது. 

அவை காலக்கோட்டின் அடிப்படையில் பின்வருமாறு:-
Read More
Unknown

எனது சகோதரர் மற்றும் தந்தை கடத்தல் சம்பந்தமாக கருணாவை விசாரணை செய்ய வேண்டும் -உலமா கட்சி தலைவர் முபாறக்

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை விசாரணை செய்யுமாறு இலங்கை உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத், காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்முனையில் நடைபெற்ற  காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் சாட்சியமளித்தார்.

இதன்போது 1990ம் ஆண்டு புலிகளால் கைது செய்யப்பட்டு காணாமல்போன தனது சகோதரர் அக்ரம் மற்றும் தந்தை சம்பந்தமாகவும் முன்னாள் பிரதியமைச்சர் அமைச்சர் முரளிதரனிடம் விசாரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
Read More
Unknown

இலங்கையின் பல்துறைக் கலைஞர் கமலினி செல்வராஜன் காலமானார்

தமிழ் திரைப்படம், நாடகத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும் விளங்கிய கமலினி செல்வராஜன் கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று காலமானார்.


அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதி இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பான ‘திருப்பங்கள்’, எஸ். ராம்தாசின் ‘எதிர்பாராதது’, எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய ‘சமூக சேவகி’ போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் கமலினி செல்வராஜன். ரூபவாஹினியிலும், ஐ.ரி. என். தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியும் வந்தவர். இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்த இவர். கொள்ளுப்பிட்டி சென். அந்தனீஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார்.



களனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். தந்தை மு. கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது சில்லையூர் செல்வராசனை திருமணம் புரிந்து கொண்டார்.



இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றகோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ‘ஆதர கதாவ” என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக
கதாபாத்திரமேற்று நடித்திருந்தவர் கமலினி செல்வராஜன்.இவரது மரணம் கலை
த்துறையினருக்கு பாரிய இழப்பாகும்.
Read More
Unknown

"தோட்டம் முதல் உணவு தட்டு வரை உணவை பாதுகாப்போம்" எனும் கருப்பொருளில் இன்று உலக சுகாதார தினம் அனுஸ்திக்கப்படுகிறது


1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் திகதி உலக சுகாதார மையம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை உலக சுகாதார தினமாக உலக சுகாதார நிறுவனம்
கடைப்பிடித்து வருகிறது.



மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு சத்துள்ள, பாதுகாப்பான உணவு அவசியம். ஆனால், இன்று பசுமைப் புரட்சி என்ற பெயரால் விளைச்சலை அதிகரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் இலட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மலடாகி வருகின்றன. அந்த நிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும், உணவுப் பொருட்களும் விஷமாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்கி வருகின்றன.



உணவு உற்பத்தி இயந்திரமயமாக் கப்பட்டதாலும், அவற்றின் விற்பனை உலகமயமாக்கப்பட்டதாலும் உணவுப் பொருட்களின் தரமும் குறைந்துவிட்டது.



பாதுகாப்பற்ற, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் நுண் கிருமிகள், வேதிப்பொருட்கள் மனிதனுக்கு 200 வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன.



அதில் மிக முக்கியமானது, இன்று மனித உலகை அச்சுறுத்திவரும் புற்றுநோய். அதனாலேயே, இந்த ஆண்டு உலக மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க "தோட்டம் முதல் உணவு தட்டு வரை உணவை பாதுகாப்போம்" என்ற கருப்பொருளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



(ஜுனைட் .எம்.பஹ்த்)
Read More
Unknown

காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கத்தை அமைப்பதற்கான பொது வேலைத் திட்டம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பாடசாலையானது 01.03.1911 ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டு விழாக்கண்ட பாடசாலையாகும்.

இப்பாடசாலையில் கல்விகற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று சமுகத்தில் உயர் நிலையில் உள்ளார்கள். இவ்வாறு கல்விக் கண் திறந்த இப்பாடசாலையில் பழைய மாணவர் சங்கமொன்று இயங்கு நிலையில் இல்லாமை பெரும் குறையாகும்.

இதனை நிவர்த்திக்குமுகமாக பழைய மாணவர் சங்கத்தை அமைப்பதற்கான பொது வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாகவும் இதனடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தில் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் இணைந்துகொள்ள விரும்பினால் பாடசாலை அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகின்ற விண்ணப்பப் படிவங்களைப் பெற்று   பூரணப்படுத்தித்  தருமாறு  கோருகின்றோம் என காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.எம்.ஹக்கீம் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய  தொ. இல –      

0652248649, 0773794779


Read More
Unknown

காத்தான்குடி நகர அபிவிருத்தி திட்டத்திற்கான விசேட கூட்டமும் களப்பயணமும்.

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

நகர அபிவிருத்தி நீர் வழங்கள் வடிகாலமைப்பு திணைக்களத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடலும் களப்பயனமும் எதிர்வரும் (09.04.2015 வியாழன்) அன்று காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும், நகர அபிவிருத்தி நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் கௌரவ றவூப் ஹக்கீம் இன் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன் ஏற்பாட்டிலும்,அழைப்பின் பேரிலும் மேற்படி நிகழ்வு இடம்பெற இருப்பதுடன் அமைச்சு மட்டத்திலான உயர் அதிகாரிகள் குழுவும் காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளது.
Read More