அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சென்னல் சாஹிறா மகா வித்தியாலயத்தில் இருமாடி வகுப்பறைக் கட்டிடத்துக்கான அடிக்கல்நடல்இ பாடசாலை சாதனையாளர்கள் கௌரவிப்புஇ மாணவத்தலைவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கல் போன்ற முப்பெரும் விழh நேற்று நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எம்.ஐ.மீராமுகைதீன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவஇ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புஇ சமூக நலன்புரிச் சேவைகள்இகிராமிய மின்சார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதீதியாக கலந்த கொண்டார்.
கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஸ்.சஹூதுல் நஜீம்இ பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன்இ பொறியியலாளர் ஏ.அறுண்இ உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.ஆப்தீன்இ வீ.ரீ.சகாதேவராஜாஇ அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர்இ இணைப்பதிகாரி ஏ.எம்.தபீக் உட்பட அதிபர்கள்இ ஆசிரியர்கள்இ மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






