Featured Home (TOP)

Recent Comments

Sunday, June 21, 2015

Unknown

" அருள் சொரியும் அற்புத மாதம்"

 புனித ரமளானின் பிறை கண்டு எழுதிய கவிதை


(மதியன்பன்)

அடிவானிற் பிறை தெரிய அகமெல்லாம் நகை விரிய
அல்லாஹ்வின் ஏவல் வரும் நோன்பாய் - அதை
அகம் மகிழ ஏற்றிடுவோம் மாண்பாய்
விடிகின்ற பொழுதுடனே விருப்பமுடன் நோன்பிருந்து
வினைதீர்க்கும் இறையோனைத் தொழுவோம் - நம்
வினை யென்னி மனமுருகி அழுவோம்.


நோன்பிருக்கும் காலத்தில் நோவினைகள் செய்யாது
நொந்தவர்க்கு உதவிகளைச் செய்வோம் - நல்ல
நோக்கமிதால் இறையருளைக் கொய்வோம்.
வான் மறையை ஓதுவதை வல்லோன் துதி பாடுவதை
வழமையென தனதாக்கிக் கொள்வோம். - உயர்
வளமான சொர்க்கத்தை வெல்வோம்.


இரக்கின்ற மாந்தருக்கு இருப்பதனை ஈந்தவரின்
இதயத்தை அன்பாலே வெல்வோம். - வரும்
இடர்களினை அதனாலே கொல்வோம்.
சுரக்கின்ற இறையருளைச் சுமந்து வரும் ரமளானை
சுமையென்று எண்ணாது ஏற்போம். - நம்
சுற்றத்தை அன்போடு சேர்ப்போம்.


பகல்நேரம் பசித்திருந்து படைத்தவனைப் பணிந்திருந்து
பக்தியுடன் நோன்பதனை நோற்போம். – இன
பந்துக்கள் உறவுதனைச் சேர்ப்போம்.
நிகரில்லா இறையவனை நின்று நிதம் வணங்குவதை
நிலையாக வாழ்க்கையிலே கொள்வோம். - பின்னர்
நிறைவான சொர்க்கத்தை வெல்வோம்.


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :