(எம்.எச்.எம்.அன்வர்)
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வு இன்று இடம்பெற்றது உதவிப்பிரதேச செயலாளர் ஏ சி அப்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட வறியமாணவர்கள் 25 பேருக்கு சிசு திரிய எனும் 500.00 மாதாந்த உதவு தொகைக்கான பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வுக்கு திவிநெகும தலைமையக முகாமையாளர் எஸ் எப் ஆர் பரீட் முகாமைத்துவ பணிப்பாளர் திரு ஏ வாமதேவன் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷெய்ஹ் எம் சீ எம் றிழ்வான் மதனி திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் அன்ஸார் பிரதேச செயலக திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாணவர்கள் மற்றும் சங்கத்தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்