வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும்
இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பு யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள வட
மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
அரசியல் கைதிகளின் குடும்பத்தினரின் வாழ்வாதார
வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகளை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய
உயர்ஸ்தானிகர் பரிசீலிப்பதாக சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
