Featured Home (TOP)

Recent Comments

Friday, April 24, 2015

Unknown

'இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்' எனும் நூலின் 3ம் பதிப்பு நூல் வெளியீட்டு விழா-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஆதரவுடன் அல் மனார் நிறுவனமும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனும் இணைந்து நடாத்தும் 'இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்' எனும் நூலின் 3ம் பதிப்பு நூல் வெளியீட்டு விழா 24-04-2015 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

அல்-மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) தலைமையில் இடம்பெற்ற இந் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு விஷேட அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி கலந்து கொண்டார்.
Read More
Unknown

இஸ்லாமிய நூதனசாலை – எனது நோக்கு: முஸ்லிம்களின் வரலாற்றை பாதுகாக்கும் முயற்சியில் மக்கள் பிரதிநிதி ஹிஸ்புல்லாஹ்

(சு. இஸ்ஸத்துன்னிஸா – மருத்துவ பீடம், கிழக்கு பல்கலைக்கழகம்)

நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசுபொருளாகியுள்ள காத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலை பற்றியும், அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள் தொடர்பான கருத்துக்கள் பற்றியும் சிந்திக்கின்றபோது இவ்விடத்தில் இளைய சமூகத்தினரின் உள்ளக்கிடக்கைச் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் இந்த ஆக்கம் வரையப்படுகின்றதே தவிர, தனிப்பட்ட முறையில் யாருடைய மனதையும் புண்படுத்தலுக்கோ, சுய இலாபங்களுக்கோ அல்ல என்பதனை ஆரம்பத்திலேயே வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றேன்.
Read More
Unknown

காத்தான்குடி பூர்வீக நூதணசாலையை பார்வையிடும் மாணவா்களோடு முன்னால்பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

(ஏ.எல்.டீன்பைரூஸ்)  

காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை பார்வையிடும் மாணவா்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் (23.04.2015 வியாழன்)  நூதனசாலையை பார்வையிட வந்த காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய(தேசிய பாடசாலை) மாணவர்களுக்கு முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக விளக்கமளித்தாா். முன்னால் பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரமான  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள்.
Read More