Featured Home (TOP)

Recent Comments

Tuesday, May 19, 2015

Unknown

ஊரார் கோழியறுத்து உம்மா பெயாில் கத்தம்..? ஒரு பிள்ளை என்பதற்காய் ஒன்பது முறை சுன்னத்


( அப்துல் அஸீஸ்.)

'ஊரார் கோழியறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவது' - இப்படியொரு பழமொழி நமது சமூகத்தில் வழக்கில் இருந்து வருகிறது. 

இதனை உண்மைப்படுத்தும் வகையில் நமதூரில் பல்வேறு விடயங்கள் அவ்வப்போது நடந்தேறி வருவதையும் நம்மால் அவதானிக்க முடிகிறது. இதிலொன்றுதான் கடந்த (17.05.2015) அன்று காலை இடம் பெற்ற கத்தமாகும். இந்தக் கத்தத்திற்;கும், ஏற்கனவே ஓதப்பட்ட பல்வேறுபட்ட கத்தங்களுக்கும் சாப்பாடு வழங்கியிருக்கிறார்கள் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினர்.
Read More
Unknown

பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின்  ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 17.05.2015 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.ஆர்.எம்.அஸ்ஹர் நளீமி தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எம். ஐ. செய்கு அலி  கலந்து கொண்டார்.

இதன் போது பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலை 65 மாணவ மாணவிகள் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு மட்டுமன்றி மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் அதிதிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Read More