Featured Home (TOP)

Recent Comments

Monday, May 25, 2015

Unknown

நான் இன்னும் சாகவில்லை பதிலடி கொடுத்த மஹிந்த.

“நான் இன்னும் சாகவில்லை. அப்பா இன்னும் இருக்கிறேன் என்று கூறத்தான் இங்கு வந்தேன்” என்று கூறி, அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்ததையடுத்து கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா, அப்பா இறந்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

இவரின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிபிலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- தற்போது பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பிப்பதில்லை. பிரதமர்தான் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றார். தீர்மானிப்பதும் அவர்தான். அமைச்சரவையில் ஒரு குழுவுள்ளது.

அதற்கு மேலாக தேசிய நிறைவேற்றுச் சபை என்ற ஒன்றுள்ளது. அதில் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கின்றது. யானையின் கழுத்தில் மணி கிடப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறியுள்ளார். மாற்றம் ஒன்று வேண்டும் என்றும்தான் மக்கள் வாக்களித்தனர். அதை நாம் ஏற்றுக்கொண்டோம்.

ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, கட்சியின் தலைமைப் பதவி வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்டனர். அதையும் கொடுத்தேன். வீட்டுக்குச் சென்று சற்று ஆறுதலாக இருந்தேன். அதன்பின்னர் என்மீது தொடர்ச்சியாக சேறுபூசத் தொடங்கினர். நானும், அதற்குப் பதிலடிகொடுக்க ஆரம்பித்தேன்.

இவற்றை கடவுளிடம்தான் சொல்லமுடியும். அதனால் விகாரைகளுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டேன். இதுபோன்ற திரிபுபடுத்தப்பட்ட அரசு; பழிவாங்கும் அரசு. நான் இன்னும் சாகவில்லை என்று கூறத்தான் இங்கு வந்தேன். அப்பா இன்னும் இருக்கிறேன் – என்று கூறியுள்ளார் மஹிந்த.
-JVP news

Read More
Unknown

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியா பயணம்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  இன்று 25 திங்கட்கிழமை மதியம் சவூதி அரேபிய நாட்டுக்கு பயணமானார்.

ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி அமைப்பினுடனான கலந்துரையாடலில்  கலந்து கொள்வதற்காக இன்று சவுதி சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் முதலில் உம்ரா கடமையை நிறைவேற்றிவிட்டு அதன் பின்னர் ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி அமைப்பின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லாஹ் அஸ் ஷிர்கியையும் ,சர்வதேச இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியினுடைய தலைவர்,முஸ்லிம் சமய கலாசார வக்பு அமைச்சினுடைய பிரதிநிதிகள்,உயர் கல்வி அமைச்சினுடைய பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Read More
Unknown

காட்டு யானை ஊடுருவல் : 4 குடியிருப்புக்கள் சேதம்

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லதண்ணியோடை பிரதேசத்தில் உட்புகுந்த காட்டு யானையொன்று அங்குள்ள நான்கு குடியிருப்புக்களை  சேதப்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்குள் 70 க்கும் மேற்பட்ட  ஏக்கர் வயல் பயிர் நிலங்கள் யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன. 
இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கடந்த வருடமும் இது போன்று நூற்றுக்கணக்கில் வீடுகளை உடைத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர் நிலங்களையும் யானை அழித்திருந்தது. இந்த நிலையில் இவ்வருடம் இப்பிரதேசத்திற்குள் புகுந்துள்ள யானையானது 2500  - 3000 ஏக்கர் வரையில் பயிர்களை அழிக்கும் என்பதுடன் கடந்த வருடம் போன்று வீடுகளையும் உடைக்கும் என பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த வருடத்தில் வீடுகள் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நட்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை.

காட்டு யானைகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு குறிப்பிட்ட யானைகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லுதலாகும். அத்துடன் யானைப்பாதுகாப்பு வேலிகளையும் அமைத்தல் வேண்டும். அத்துடன் தொடர்ச்சியான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
Read More