Featured Home (TOP)

Recent Comments

Sunday, May 31, 2015

Unknown

ரோஹிங்க்யா மறக்கப்பட்ட மக்கள் எனும் விஷேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு காத்தான்குடியில்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மியன்மார் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக சமூக வலைத் தளங்களில் பல பிழையான செய்திகளும் தொடர்பில்லாத புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

இது தவறானதாகும். உண்மையில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? அவர்கள் தற்போது எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை யாது என்பதை மிக சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களான நாம் இப்பிரச்சினையை எவ்வாறு அணுக வேண்டும் என்பதில் முறையான கவனம் அவசியப்படுகிறது.
Read More
Unknown

அவர்கள் அடிமையானது, அவர்கள் குற்றம் மட்டுமல்ல..

(ஆர். இஸ்ஸதுன்னிஸா, மருத்துவபீடம் - கிழக்குப் பல்கலைக்கழகம்)

உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று.
சாதி இன மத பேதங்களைக் கடந்து அனைவரும் சமத்துவமாய் அணுகும் பிரதான விடயங்களுள் ஒன்று புகைத்தல், மது, போதை மருந்துப் பாவனை. 

இன்றைய சமூகத்தின் அவலங்களுள் ஒன்று நாம் சாதகமான விடயங்களிற்காக ஒன்றிக்க மறந்து சமூக சீரழிவுக்குரிய விடயங்களில் ஒன்றித்துக் கிடப்பது.

எல்லா மதங்களையும் விட்டு மிகத் தூரம் சென்றுவிட்டது போதை இன்று.
சாதாரண சிகரட் புகைத்தலில் இருந்து அதியுயர் வகை போதைப் பொருள் அடிமையாதல் வரை இன்று எதிர்பாரா தகவல்கள் தினம் தினம் எதிர்பாரா மனிதர்களிடமிருந்தும் சமூகங்களிடமிருந்தும்.
Read More
Unknown

காத்தான்குடியில் இடம்பெற்ற NFGG மக்கள் சந்திப்பு

(ஊடகப்பிரிவு,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று (30.05.2015) காத்தான்குடி குட்வின் சாந்தியில் இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான பிராந்திய சூறாசபை உறுப்பினர் வித்தியாகீர்த்தி MM.அமீரலி ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் சமகால அரசியல் விடயங்கள், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைப்பாடுகள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பங்குபற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

Read More
Unknown

காத்தான்குடியில்- புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் திறந்து வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சவூதி அரேபிய நாட்டு பிரமுகரின் நிதி உதவியுடன் ஒலுவில் பாலமுனை ஜம்மியதுஸ் சஹ்வா அல் கைரிய்யா அமைப்பின் அணுசரனையில் காத்தான்குடி -06ம் குறிச்சி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் திறப்பு விழா 31-05-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை ளுஹர் தொழுகை நேரத்தில் இடம்பெற்றது.

மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் முஹம்மது அலியார் முஹம்மது அப்துர் ரவூப் தலைமையில் இடம்பெற்ற பள்ளிவாயல் திறப்பு விழாவில் ஜம்மியதுஸ் சஹ்வா அல் கைரிய்யா அமைப்பின் தலைவர் அஷஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம் அஷ்சூரி , சவூதி அரேபிய நாட்டு பிரமுகரகள்; ,ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அமீன் (பலாஹி), மஸ்ஜிதுர் றஹ்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி ஷாஜஹான் (பலாஹி), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ,உட்பட ஊர் பிரமுகர்கள்,உலமாக்கள்,பள்ளிவாயல் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Read More
Unknown

NFGG யுடனான நேரடிக் கலந்துரையாடலுக்கு நான் தயாா், எப்போது நேரம் தருவீா்கள்,,? புவி. றஹ்மதுழ்ழாஹ் கேள்வி

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்த காலச் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள, விமர்சனங்களைக் கொண்டுள்ளவர்கள் தம்முடன் நேரடியாகக் கலந்துரையாடி தமது அதிருப்திகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பில் உரிய தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றின் கடந்த காலச் செயற்பாடுகளில் தனக்குள்ள அதிருப்திகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து உரிய தெளிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு அடுத்து வரும் பகிரங்கப் பொதுக்கூட்டம் ஒன்றில் சந்தர்ப்பம் வழங்குமாறு 'வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More
Unknown

யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பதிவுகளை மேற்கொண்டுள்ள மக்களுக்கான பொது அறிவித்தல்

(ஊடகப்பிரிவு,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)
வீடமைப்பு அமைச்சின் நிதியின் கீழ் வீடுகளைத் திருத்தியமைப்பதற்காக குடும்பமொன்றுக்கு 100,000.00 ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவித்திட்டம் தற்போது பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் குடும்பப்பதிவுகளைக் (அ காட்களைக்) கொண்டிருக்கின்ற அனைவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். எனினும் போதியளவு விண்ணப்பங்கள் தம்மை வந்துசேரவில்லை என யாழ்ப்பாணம் பிரதேச செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Read More
Unknown

செய்தி ஒன்றுக்காக ஊடகவியலாளரைக் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா? பருத்தித்துறை நீதவான் கேள்வி! கைது செய்யப்பட்டிருந்த யாழ். ஊடகவியலாளர் விடுதலை!

(புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

யாழ்ப்பாணத்தில் பிராந்திய பத்திரிகை ஒன்றில் பிரசுரமான செய்தி தொடர்பில் விசாரணைக்குட்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர், விடுதலை செய்யப்பட்டார்.

போதுமான குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக இல்லை என்றும், செய்தி ஒன்றுக்காக ஊடகவியலாளர் ஒருவரைக் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா? இல்லையா? என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் தெரிவித்து பருத்தித்துறை நீதவான் எம். கணேசராஜா அவரை விடுதலை செய்தார்.
Read More