
பொறியியலாளர் றஹ்மானுக்கு தேசியப் பட்டியல் கொடுப்பதில் சிப்லி பாறூக் மற்றும் முபீன் ஆகியோருக்கு அதிருப்தி...?
(அபூ நிதா)
இன்று (19.08.2015) இஷா தொழுகையின் பின், தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாயலில் மௌலவி சஹ்றான் அவர்களால் தேர்தல் முடிவு சம்மந்தமான தன்னிலை விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது.
தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் காத்தான்குடியிலிருந்து ஒரு குழு கொழும்பு செல்ல விருப்பதாகவும், அதில் NTJ சார்பாகவும் வருமாறு NFGG யினால் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இன்று பிற்பகல் 04.30 மணிக்கு நடை பெற்ற கலந்துரையாடலில் NTJ தரப்பு அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இன்றிரவு 09.00 மணிக்கு புறப்படவிருந்ததாகவும் தனது முதற்கட்ட உரையில் தெரிவித்தார்
தொடந்தவர் உரையாற்றுகையில் இது தொடர்பாக NTJ யின் அவசரக் குழுக்கூட்டத்தில் நாம் ஒப்பந்தம் செய்திருக்கின்ற மற்றுமொரு தரப்பினரான சகோதரர் சிப்லி பாறூக் தரப்பினரோடு கலந்தாலோசிக்க வேண்டும் என முடிவு எட்டப்பட்டதாகவும் அதற்கிணங்க சகோ. சிப்லி பாறூக் அவர்களுடன் இது தொடர்பாக பேசிய போது வெளிப்படையாக ஆட்சேபனை இல்லையெனத் தெரிவித்தாலும்கூட, அவர் பேசியதன் சாராம்சம் அவ்வாறு செல்வது ஒப்பந்த விதிகளுக்கு முரணாகும் என்பதாக சுட்டிக்காட்டி அதிருப்தியினை வெளியிட்டார்.
அத்தோடு சகோ.முபீன் அவர்களிடம் பேசிய போது நான் SLMC யின் மிக நீண்டகால உறுப்பினராக இருந்து வருகின்றேன் அவ்வாறு தேசியப் பட்டியல் காத்தான்குடிக்குக் கிடைக்குமாக இருந்தால் அதற்கு முழுத்தகுதியும் உடையவன் நான் மாத்திரமே என்று கூறியதாகவும் மௌலவி சஹ்றான் தெரிவித்தார்.
எனவே, மேற்கூறிய நியாயமான...???? காரணங்களினால் கொழும்பு செல்லும் குழுவுடன் NTJ அமைப்பு செல்ல முடியாது என்று NFGG யினரிடம் தெரிவித்து விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
