Featured Home (TOP)

Recent Comments

Monday, May 25, 2015

Unknown

காட்டு யானை ஊடுருவல் : 4 குடியிருப்புக்கள் சேதம்

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லதண்ணியோடை பிரதேசத்தில் உட்புகுந்த காட்டு யானையொன்று அங்குள்ள நான்கு குடியிருப்புக்களை  சேதப்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்குள் 70 க்கும் மேற்பட்ட  ஏக்கர் வயல் பயிர் நிலங்கள் யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன. 
இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கடந்த வருடமும் இது போன்று நூற்றுக்கணக்கில் வீடுகளை உடைத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர் நிலங்களையும் யானை அழித்திருந்தது. இந்த நிலையில் இவ்வருடம் இப்பிரதேசத்திற்குள் புகுந்துள்ள யானையானது 2500  - 3000 ஏக்கர் வரையில் பயிர்களை அழிக்கும் என்பதுடன் கடந்த வருடம் போன்று வீடுகளையும் உடைக்கும் என பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த வருடத்தில் வீடுகள் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நட்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை.

காட்டு யானைகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு குறிப்பிட்ட யானைகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லுதலாகும். அத்துடன் யானைப்பாதுகாப்பு வேலிகளையும் அமைத்தல் வேண்டும். அத்துடன் தொடர்ச்சியான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
Read More

Sunday, May 24, 2015

Unknown

காத்தான்குடி பிரதேச முஸ்லிம் ஊடகவியலாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விஷேட சந்திப்பு- ஓடியோ முழுமையாக இணைப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று 24 ஞாயிற்றுக்கிழமை மதியம் காத்தான்குடி கயா பேக்கரி அன்ட் ரெஸ்டுரெண்டில் வைத்து விஷேடமாக சந்தித்து கலந்துரையாடினார்.

இதில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்கள் , எஸ்.எம்.எஸ்.குறுஞ் செய்தியாளர்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சுபைர் ,முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Read More
Unknown

ஊடகவியலாளர்களின் சட்ட பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை –மட்டக்களப்பில்-படங்கள்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இலங்கை இணைய ஊடகவியலாளர் சங்கம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியன இணைந்து றைட்ஸ் நைவ் அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா - ஊடகக் கற்கைகள் நிறுவன அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான சட்ட பாதுகாப்புக்கான பயிற்சிப்பட்டறை நேற்று 23 சனிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளத்தின் தலைவர் எல்.தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சிப்பட்டறையில் கருத்துத் தெரிவித்த தேவ அதிரன், ஊடகவியலாளர்களுக்கான சட்டத்துறை சார்ந்த அறிவு, அதுசார்ந்த தேவைகள் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.
Read More
Unknown

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் மாசிலாமணியின் கருத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி முகாமையாளர் முபாறக் கண்டனம்


ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் மாசிலாமணியின் கருத்தை ஐக்கிய
தேசியக் கட்சியின் காத்தான்குடி முகாமையாளர் வி.ரி.எம்.முபாறக்
கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி
முகாமையாளர் வி.ரி.எம்.முபாறக
வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஐக்கிய
தேசியக் கட்சியின் கல்குடா தொகுதி
அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ். மாசிலாமணி
மட்டக்களப்பில் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்க சிலர்
முயற்சி என்ற தலைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருப்பதை நான்
வன்மையாக கண்டிக்கின்றேன்.
Read More