Featured Home (TOP)

Recent Comments

Friday, July 17, 2015

Unknown

தனது உண்மையான பெயரை உறுதிப்படுத்தினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனது உண்மையான பெயர் முகம்மது பாறூக் முகம்மது ஷிப்லி என்பதை இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2012ல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது, இவர் தனது பெயரை 'அப்துல் பாறூக் மொஹமட் ஷிப்லி' என வேட்புமனுவில் உறுதிப்படுத்தியிருந்தார். இதனால் அந்தப் பெயரின் அகர வரிசை அடிப்படையில் தேர்தல் திணைக்களம் அவருக்கான விருப்பு இலக்கத்தை அப்போது வழங்கியிருந்தது.

அந்த விருப்பு இலக்கத்தைப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்கள் மத்தியில் அவரும், அவரது கட்சியான அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அ.இ.ம.கா. கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்ததனால் அவர் கிழக்கு மாகாண சபைக்கு ஒரு உறுப்பினராகத் தெரிவானார்.

அவரது பெயர் மோசடிச் செயற்பாடு குறித்து ஊடகங்களிலும், அரசியல் மேடைகளிலும் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்டு வந்த போதிலும், அவர் அது குறித்து எத்தகைய பதிலும் அளிக்காமல் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக மௌனமே காத்து வந்தார். இந்நிலையிலேயே கடந்த 13ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட ஸ்ரீ.ல.மு.கா. வேட்புமனுவில் அவர் தனது பெயரை 'முகம்மது பாறூக் முகம்மது ஷிப்லி' எனக் குறிப்பிட்டு அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் அவரது உண்மையான பெயர் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், தனக்கு விருப்பமான முன்னணி விருப்பு இலக்கமொன்றைப் பொற்றுக் கொள்ளும் உள்நோக்குடன் மோசடியான வகையில் தேர்தல் திணைக்களத்திற்குத் தெரிவிக்கப்பட்டிருந்த பெயரில் இவர் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எனும் பதவியானது சட்டரீதியாகச் செல்லுபடியாகுமா? என்பது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை பெற்று வருவதாகவும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More
Unknown

டெங்கு காய்ச்சலினால் 17000 பேர் பாதிப்பு

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுலை 16 வரை டெங்கு காய்ச்சலினால் 17 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் (5017) இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக கம்பஹா மாவட்டத்தில் 2307 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1271 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரில் 50 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கட்டுமானத் தளங்கள், பூர்த்தியாகாத கட்டிடங்கள் மற்றும் நகர்ப்புறம் ஆகியன நுளம்பு பெருகும் முக்கிய இடங்களாக உள்ளன.
டெங்கு நுளம்புகள் நீர் இன்றி ஒரு வருடத்திற்கு மேலாக உயிர்வாழத்தக்கவையாகும். சுத்தமான அல்லது அசுத்தமான நீர் தேங்கி நிற்கும் சிறிய போத்தல் அல்லது காய்ந்த இலைகளில் தேங்கி நிற்கும் நீர் என்பன இந்நுளம்பு இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணிகளாகும்.
virakesary.lk
Read More
Unknown

எமது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

உலகளாவிய ரீதியில் இன்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எமது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

Avathani Media Network





Read More
Unknown

சர்வதேச பிறை அடிப்படையில்- நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை-காத்தான்குடியில்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர்.
 
இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன 17-07-2015 இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு,புத்தளம்,அக்கறைப்பற்று ,காத்தான்குடி, நீர் கொழும்பு ,ஹபுகஸ்தலாவ உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்றது.
 
இதற்கமைவாக காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பு ஏற்பாடு செய்த நபி வழியிலான புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் நடைபெற்றது. 
 
இங்கு பெருநாள் தொழுகையை மௌலவி அஷ்ஷெ;ய்க் அஸ்பர்(பலாஹி) நடாத்தியதோடு பெருநாள் குத்பாப் பிரசங்கத்தை பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் நிகழ்த்தினார்.
 
இதில் ஆண் பெண் அடங்கலாக சுமார் 1500க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.
 
சர்வதேசப் பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இலங்கை நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர். 
 
குறிப்பு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதன் பின்னர் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.























Read More