Featured Home (TOP)

Recent Comments

Tuesday, December 15, 2015

avathani Media Network

பாலர்கள் பிழை செய்கின்ற போது கூட அது அழகுதான் - அலிஸாஹிர் மௌலானா.

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி அஷ்ஸஹ்றா பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு காத்தான்குடி கடற்கரை கடாபி கார்டனில் ஆசிரியர் எம்.எம்.எம்.லாபிர் தலைமையில் இடம் பெற்றது பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செய்யது அலிஸாஹிர் மௌலானா கலந்து கொண்டார்.

மேற்படி நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் முன்னால் பிரதி நகர முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை ஓய்வு பெற்ற அதிபர் யு.எல்.எம்.முபாறக். சீ.எம்.கலீலுா்ரஹ்மான், கிராம சேவை உத்தியோகஸ்தரும், அஷ்ஸஹ்றா பாலர் பாடசாலையின் ஸ்தாபகர்களில் ஒருவருமான ஏ.எம்.அஸீஸ் உட்பட ஊடகவியாளர்கள், பெற்றொர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாலர்கள் பிழை செய்கின்ற போது கூட அது அழகுதான் மேற்படி பாடாலை மாணவர்களின் திறமைஇதன்நம்பிக்கை என்பவற்றை அவதானிக்கின்ற போது பெருமையாக உள்ளது என பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செய்யது அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.....

யுனிசெப் நிறுவனத்துடைய பணிப்பாளர் எனது நண்பர் பாலர் பாடசாலைகளுக்கு உதவுவதற்கு எமது நிறுவணம் தயாராக உள்ளது என அவர் என்னிடம் கூறினார். ஆகவே  நாங்கள் யுனிசெப் நிறுவனத்திடம் சிபார்சு செய்வதில்  காத்தான்குடி அஷ்ஸஹ்றா பாலர் பாடசாலைக்கு முதலிடம் என்றும் தெரிவித்தார்.

இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளை கௌரவிக்கின்ற நிகழ்வு மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக இடம் பெற்றது 












Read More
avathani Media Network

உம்மா நான் உம்றாக்கு போறன்!!!

(காத்தான்குடி நிஷவ்ஸ்)

உம்மா நான் உம்றாக்கு போறன் -தொடர்ந்து
ஒவ்வொரு வருடமும் ஓயாமல் போறன்.
சும்மா நான் ஜொலிக்காகப் போறன்-இங்கு
ஷோ காட்டி வாழாட்டி சுற்றத்தார் மதிக்கார்.

சாச்சி பெரியம்மா பசியால்-ஊரில்
சாகக் கிடந்தாலும் நான் உதவ மாட்டேன். 
ஈச்சம் பழம் கொண்டு வருவேன்-அதன்
இடையில தங்கம் பிஸ்கட்டா இருக்கும்.

பருப்போடு பாண் தின்னும் போதும்-பின்னர்
பள்ளியில் பக்தியாய் தவாப் செய்யும் போதும்
குறூப்போடு செல்பிகள் எடுப்பேன்-fbயில்
குறிப்போடு போட்டு குஷியாக இருப்பேன்.

விமானத்தில் தருகின்ற பெட்சீட்-அதை
விளங்காமல் சுருட்டி
வைப்பேனே பேக்கில்
அமானத்தை நான் பேண மாட்டேன்-ஆனாலும்
அடுக்காக உம்றாக்குப் போவேன்

செக்குக்கு டேட் போட்டு கொடுப்பேன்-பின்
செரியான டேட்டுக்கு பணம் போட முன்னால்
மக்காக்கு டக்கென்று போவேன்-அந்த
மக்கிங்கு செக்கோடு சிக்கலில் தவிப்பான்.

உம்றாக்கு போகின்ற பலபேர்
உண்மையில் நல்லோர்கள்
உயர்ந்திட்டார் அமலில்.
சும்மாவும் போகின்றார் சிலபேர்-இங்கு
சொன்னது அந்த சிலபேர்க்கு மட்டும்.
(காத்தான்குடி நிஷவ்ஸ் -14/12/2015)

Read More
avathani Media Network

உலகம் இருளில் மூழ்கும் என்பது பொய்

உலகம் அடுத்துவரும் சில தினங்களுக்கு இருளில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படும் செய்தி குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீடப் பேராசிரியர் சந்தன ஜயரட்ன நேற்றுத் தெரிவித்தார்.
அடுத்து வரும் சில தினங்களுக்கு உலகம் இருளில்  இருக்கும் என்ற தகவல் இணைய தளங்களின் ஊடாகவே பரப்பப்படுகிறது. இதனை உறுதிப்படுத்துவதற்கு விஞ்ஞான பூர்வ ஆதாரங்கள் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இச் செய்தியைப் பரப்புவோர் தங்களது கூற்றுக்கு நாஸா நிறுவனத்தையும் துணைக்கு அழைத்துள்ளனர். இதனூடாக மக்களை நம்ப செய்ய முடியுமெனவும் அவர்கள் எதிர்பார்த்துள்ளனர் போலும் ஆனால் நாஸா நிறுவனம் இது தொடர்பாக எதுவித தகவலையும் உத்தியோக பூர்வமாக வெளியிடவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
Read More

Monday, December 14, 2015

avathani Media Network

வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை! தனியார் பஸ் உரிமையாளர்கள்


இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நாளைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது. 
நாளை 15ம் திகதி அரச, அரை அரசாங்க (semi-government) மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. 

2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று முன்தினம் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள் இதனைக் கூறினர். 

இந்தநிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நாளைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளது. 

Read More