Featured Home (TOP)

Recent Comments

Tuesday, December 29, 2015

avathani Media Network

பிசராந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP) கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மீதான தடுப்பு காவல் உத்தரவு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால்  எதிர்வரும் ஆண்டு 2016 ஜனவரி 12ம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க படசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.
குறித்த வாக்கு மூலத்தையடுத்து விசாரனைகளை மேற்கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

தேரரோடு சூடுபிடித்த தொலைக்காட்சி விவாதம் ஒரு பார்வை.


(றிம்சி ஜலீல்)

நேற்று சரியாக 10.00 மணி இருக்கும் தேரரோடு விவாதம் அதுவும் ஒரு முஸ்லிம் அமைச்சர் சிங்கள பாசை கூட சரியாகத் தெரியாதவர் இவர் அங்கு போய் என்ன செய்யப் போகிறார் என்று மக்கள் மத்தியில் பல குழப்பம் மற்றும் விமர்சனங்கள் வேறு.

விவாதம் ஆரம்பமானது பாஹியங்கம ஆனந்த தேரர் முதலில் பேச ஆரம்பித்தார் வில்பத்து வரலாற்றுடன் ஆரம்பித்த அவர் வில்பத்து வனப்பகுதியில் பாரிய காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியமர்த்தப்படுவதாக தனது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.

அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கிய அமைச்சர் ரிசாத் வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக முஸ்லிம்கள் குடியேற்றப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூர்வமாக பதில் வழங்கினார் என்னால் நம்ப முடியவில்லை சிங்களம் தெரியாது என்று மக்கள் கூறிய அமைச்சரா..?? இவ்வாறு கதைக்கிறார் என்று ஒரே ஆச்சரியம்..!!

மீண்டும் வில்பத்து வனப்பகுதியில் பாரிய காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியமர்த்தப்படுவதாக பாஹியங்கம ஆனந்த தேரர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அத்துடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மன்னார் பிரதேசத்தில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார் பாஹியங்கம ஆனந்த தேரர்.

இக்குற்றச்சாட்டுக்கு தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர் நான் குடு வியாபாரம் செய்வதாக நீங்கள் கூறுகி்ன்றீர்கள் இதுகுறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு உங்களுக்கு நான் சவால் விடுகிறேன் சும்மா பொய் கூறி மக்களைத் திசை திருப்ப வேண்டாம் என்றார்.

இவ்வாறு நேற்று இரவு பத்து மணி தொடக்கம் தனியார் தொலைக்காட்சியில் நடந்த அமைச்சர் ரிசாத் பதியுதீனுடனான,நேரடி விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

மீண்டும் தொடர்ந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் அரச ஆவணங்கள் மற்றும் நிலஅளவையியல் திணைக்களத்தின் ஆவணங்களை முன்வைத்து வில்பத்து வனப்பகுதியில்ஒரு அங்குல நிலமேனும் காடழிப்பு மேற்கொள்ளப்படவில்லை என  ஆதாரபூர்வமாகநிரூபித்தார்.

இதனையடுத்து குற்றச்சாட்டை மாற்றிய ஆனந்த தேரர், வில்பத்து வனாந்திரத்தைசுற்றிலும் சிங்களக் குடியிருப்புகளே இருந்ததாகவும், வரலாறு காலம் தொட்டுஅப்பிரதேசம் சிங்களவர்களுக்கு உரித்தானதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனந்த தேரரின் அந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆங்கிலேயர் காலம் தொட்டு தமிழ், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மன்னாரில் வாழ்ந்து வந்திருப்பது குறித்த ஆதாரங்களை
முன்வைத்தவுடன் விவாதத்தை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் இனவாத கருத்துக்களை வெளியிடத் தொடங்கினர்.

இதனையடுத்து குறித்த தனியார் தொலைக்காட்சியின் முகாமைத்துவத்தை தொடர்பு கொண்ட ஊடகவியலாளர் ஆர்.எப். அஷ்ரப் அலீ, பளளுவெவ அபுல்கலாம் ஆசாத்,
கலாநிதி றியாஸ், உள்ளிட்ட குழுவினர் தங்களது கடுமையான ஆட்சேபணையை தெரிவித்தாக நம்பகத் தகும் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் இனவாதக் கருத்துக்களுக்கு பதிலளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன்குறித்த நேரடி விவாத நிகழ்ச்சியில் இனியும் ஒரு வார்த்தை தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராகவோ, மன்னாரில் அவர்களின் பூர்வீக உரிமைகளுக்கு எதிராகவோ இனவாதக் கருத்துக்களை வெளியிட்டால் நள்ளிரவுக்குள் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் பொதுமக்களால் முற்றுகையிடப்படும் என்றும் தமது எதிர்ப்பை வெளியிட்டார்.

இவ்வாறு தொடர்ந்தும் வில்பத்து விவகாரம் பற்றி தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் தாம் கட்டமைத்த பாரிய பொய்ப் பிரச்சாரத்தை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தகர்த்தெரிந்தமை தொடர்பாக கடுமையான ஆத்திரத்துடன் ஆனந்த தேரர்தனது இனவாதக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் முன்வைத்தார்.

அத்துடன் முழுநாட்டு மக்களினதும் அவதானத்தை ஈர்த்திருந்த இந்த நேரடி நிகழ்ச்சியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மன்னார் என்பது சிங்களவர்களுக்கு ஒருபோதும் உரித்தானதாக இருக்கவில்லை என்றும் , அப்பிரதேசம் முழுக்க தமிழ், முஸ்லிம், கிறித்தவர்களின் பாரம்பரிய பூமி என்றும் பலமான பல கருத்துக்களை அமைச்சர் பதிவு செய்தது டீவி பார்த்துக் கொண்டிருந்த எமக்கு ஆச்சரியத்தை அளித்து.

நல்லிரவு 1.30 மணிவரைத் தொடர்ந்த இந்த விவாத நிகழ்ச்சியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு துணிச்சலை வெளிப்படுத்தியது சிங்கள தமிழ்  கிறித்தவ மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றது என்று கூறும் அளவுக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது..

றிம்சி ஜலீல்
மடலஸ்ஸ
கெகுணகொல்ல
குருநாகல்.
Read More
avathani Media Network

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது வருடாந்த நிறைவு விழாவும், செய்தியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது வருடாந்த நிறை விழாவில் அம்பாரை மாவட்டத்தில் பணிபுரியும் சிரேஷ்ட, கணிஷ்ட  
ஊடகவியலாளர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது வருடாந்த நிறைவு விழாவும், ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசனம் மீரா.எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், பிரதியமைச்சர்களான எம்.சீ.பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஆரீப் சம்சுதீன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இன்னும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா, ரூபவாஹினி தமிழ் செய்திப் பிரிவின் பணிப்பாளர் யூ.எல்.யாக்கூப் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, ஊடகவியலாளர்களையும் கௌரவப்படுத்தினர்.

ரூபவாஹினி தமிழ் செய்திப் பிரிவு பணிப்பாளர் யாக்கூப் கருத்துத் தெரிவிக்கையில்:- 'இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரச ஊடகங்கள் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடியதான சுதந்திரத்தை வழங்கியிருக்கின்றது' எனத் தெரிவித்தார். 

அமைச்சர் றவூப் ஹக்கீம் இங்கு கருத்தத் தெரிவிக்கையில் 'நான் ஊடகவியலாளர்களை என்றும் மதிக்கின்றேன். சகோதரர் குணராசா, யாக்கூப் சொன்னது மாதிரி இந்த அரசு புதிய ஒரு ஊடககலாச்சாரத்தை உருவாக்கி இருக்கின்றது. நல்ல சுதந்திரத்தை வழங்கி இருக்கின்றது. அதனை முழுமைப்படுத்தும் வகையில் விரைவில் தகவலறியும் சட்டமூலத்தைக் கொண்டு வர இருக்கின்றது. தகவலறியும் சட்டமூலம் வந்தால் அது ஊடகவியலாளர்களுக்கு மேலும் வலுச் சேர்க்கும். மேலும் எமது ஊடகவியலாளர்கள் புலனாய்வுத் துறையிலும் அக்கரை செலுத்த வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.











Read More
avathani Media Network

காத்தான்குடியில் ஆங்கிலக் கல்வியில் ஓர் புரட்சி

(எம்.எச்.எம்.அன்வர்)

SRD நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆங்கிலம் பேச ஒரு சந்தர்ப்பத்தினை மாணவர்களுக்கு ஏற்படுத்தி சரளமாக கூச்சமின்றி ஆங்கிலம் பேசுவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தும்முகமாக நேற்றய தினம் 27.12.2015 வைபவ ரீதியாக காத்தான்குடி ஜூமைறா பெலசில் English Communication Club  எனும் பெயரில் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது 

SRD நிறுவனத்தின் செயலாளர் டொக்டர் எம் டி எம் மாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான துருக்கித் தூதுவர் பி எம் அம்ஸா ளடகள கலந்து கொண்டு ஆரம்பித்ததுடன் காத்தான்குடி அதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜாபிர் தனியார் நிறுவனத்தின் திட்டமிடல் உத்தியோகத்தர் கே எம் நவாஸ் சட்டத்தரணி ஏ உவைஸ் டொக்டர் ஏ எல் எம் சியாம் பொறியியலாளர் எம் எம் தௌபீக் உட்பட மேலும் உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்கள் ஆங்கிலக்கல்வியால் நாம் அடைந்த நன்மைகள் தங்கள் வாழ்க்கையில் ஆங்கிலக்கல்வி பயிலும்போது ஏற்பட்ட தடைகளும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் ஆங்கிலத்தில் தெரிவித்ததுடன் ஆங்கிலக்கல்வியை கட்டாயம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தினர்
ளசன அமைப்பின் சமூக சேவை வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவும் துணிவுடன் அவற்றை கற்கவும் பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் காலங்களில் நடாத்தப்படவுள்ளதாக டொக்டர் எம் டி எம் மாஹிர் தெரிவித்தார்








Read More