Featured Home (TOP)

Recent Comments

Tuesday, February 17, 2015

Unknown

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் குறித்து உடனடி நடவடிக்கை அவசியம்

நாட்டில் கடந்த காலங்­களில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதிராக இழைக்­கப்­பட்ட அநீ­திகள் தொடர்­பி­லான தக­வல்கள் உள்­ள­டங்கிய கடிதம் ஒன்­றினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன­வுக்கு அனுப்­பி­வைத்­துள்­ள­தாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்­டத்தின் கீழ் இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வதன் மூலம் உரிய தீர்வை எதிர்­பார்­ப் ப­தா­கவும் குறிப்பிட்டார்.

மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அஸாத்­சா­லியின் இல்­லத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை ஏற்­பாடுசெய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.
இதன்­போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;
கடந்த காலங்­களில் எமது முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளினால் அரங்­கேற்­றப்­பட்ட அநீதிகள் தொடர்­பி­லான தக­வல்­களை உள்­ள­டக்­கிய கடிதம் ஒன்றை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ளோம்.
நல்­லாட்­சிக்கு வித்­திட்­டுள்ள புதிய அர­சா­னது இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு எமது சமூ­கத்­துக்­கான உரிய தீர்வை முன்­வைக்கும் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது.
இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 226 சம்­ப­வங்கள் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன.
இன­வாத செயற்­பா­டுகள்
எமது நாட்டில் யுத்த காலத்தை விடவும் யுத்­த­த்திற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யி­லேயே இன­வாத செயற்­பாட்டை மூவின மக்­க­ளி­டையே பரப்பி ஒரு சில தரப்­பினர் அர­சியல் இலாபம் காண்­ப­தற்கு முயற்­சித்­தனர்.
இன்று எமது நாட்டில் மட்­டு­மல்­லாது உலக நாடு­க­ளிலும் ஒரு சில தரப்­பினர் இன­வாதப் போக்­கினை கையில் வைத்துக் கொண்டு அர­சியல் நடத்­து­கின்­றனர்.
எனவே, எமது நாட்டின் மூவின மக்கள் கடும் இன­வாத சக்­தி­க­ளிடம் இருந்து விடு­பட்டு அனைத்து மக்­களும் சுதந்­தி­ர­மாக வழி வகுத்­திடும் ஒரு நல்­லாட்சியின் கீழ் சுதந்­தி­ர­மா­கவும் ஒற்­று­மை­யா­கவும் வாழ்ந்துவரு­கின்­றனர். எனவே நல்­லாட்­சிக்­கான புதிய அர­சா­னது மீண்டும் இன­வாத போக்­கு தலை­தூக்­கு­வ­தற்கு எந்த தரப்­பி­ன­ருக்கும் இட­ம­ளிக்­காது கடந்த காலங்­களில் முஸ்லிம் மக்கள் உட்­பட அனைத்து மக்­க­ளுக்கும் எதிராகவும் இழைக்­கப்­பட்ட அநீ­திகள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு உரிய தீர்வை முன்­வைக்க வேண்டும்.
பேரு­வளை சம்­பவம்
கடந்த காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக ஒரு சில அடி­ப்ப­டை­வாத சக்­தி­க­ளினால் அநு­ரா­த­பு­ரத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களின் செயற் ­பா­டா­னது இறுதி­யாக பேரு­வ­ளையில் உச்­சக்­கட்­ட­மாக கட்­ட­விழ்த்து விடப்­பட்­டது.
பேரு­வளை வன்­முறை சம்­ப­வங்­க­ளினால் எமது முஸ்லிம் மக்கள் தமது வீடுகள் உட்­பட தமது வியா­பாரங்களையும் இழந்து இன்றும் நிர்­க்க­தி­யாக வீதிகளில் நிற்­கின்­றனர்.
முன்­னைய அர­சா­னது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கான் வீடு­களை அமைத்துக் கொடுத்­ததைத் தவிர வன்­மு­றை­யினால் தமது தொழில்­களை இழந்து நிற்கும் எமது சமூ­கத்­திற்கு இது வரையில் எந்த தீர்வுத் திட்­டத்­தையும் முன்­வைக்கவில்லை எனவே புதிய அர­சா­னது இதற்­கான உரிய தீர்வை முன்­வைப்­ப­தோடு கடந்த காலங்­களில் இவ்­வா­றன வன்­மு­றை­க­ளுக்கு சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னர் தொடர்பில் விசா­ர­ணைகள் மூலம் உரிய நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள வேண்டும்.
புதிய அரசின் நல்­லாட்சி
புதிய அரசின் நல்­லாட்சியின் கீழ் நாட்டின் மூவின மக்­க­ளி­டையே ஒற்­று­மையை எற்­ப­டுத்தி சுதந்­தி­ர­மான முறையில் தத்­த­மது செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்திக் கொடுத்தல் வேண்டும். முப்பது வருட யுத்தத்தில் இருந்து விடுப்பட்டிருக்கும் நாம் யுத்தத்தில் உயிர் நீத்த எமது இரானுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமானால் நாட்டில் மூவின மக்களிடையே ஒற்றுமையை தொடர்ந்து பேணிவரவேண்டும். இதுவே நல்லாட்சியின் முக்கிய ஒரு செயற்பாடு. இதனை புதிய அரசு தொடர்ந்து பாது காக்கும் என்ற முழு நம் பிக்கை அனைத்து மக்களிடையேயும் காணப்படுகின்றது.
Source - Virakesary.lk

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :