-டீன் பைரோஸ்-
காத்தான்குடி பாலமுனை கர்பலா வீதி பல ஆண்டுகலாக கவனிப்பாரற்று கிடக்கின்ற நிலையில் கடந்த காலங்களில் தேர்தல் வாக்குறுதிகள் பல அளித்திருந்த நிலையிலும்மேற்படி விதியினை உரிய காலத்தில் போட யாரும் முன்வரவில்லை என்பதே உண்மை.
மக்கள் படும் கஸ்டமான நிலையினை போராட்டத்தின் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் (13.02.2015 வெள்ளிக்கிழமை) ஜூம்ஆ தொழுகையின் பின் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது
கர்பலா வீதி அபிவிருத்தி செய்வதன் மூலம் காத்தான்குடி பாலமுனை போக்குவரத்து சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
தமிழ்,முஸ்லிம் மக்களின் பிரதான பாதையாக மேற்படி வீதி காணப்படுகின்றது. எனவே முஸ்லிம் அரசியல் வாதிகள் மாதிதிரமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வீதி விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பது யார் என்பதே இன்றைய கேள்வியாகும்...?