அவதானி
கடந்த ஆறு வருடங்களாக வாராந்தரியாக வெளிவந்து கொண்டிருந்த விடிவெள்ளி பத்திரிகை நேற்று (16.02.2015) முதல் தினசரி பத்திரிகையாக வெளிவருகிறது என்ற செய்தி வாசகர் மத்தியில் சந்தோசமான செய்தியாகக் கிடைத்திருக்கிறது.
குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் மிக நீண்ட கால எதிர்பார்ப்புக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது
குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் மிக நீண்ட கால எதிர்பார்ப்புக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது
முஸ்லிம்களுக்கென தனியான ஊடகம் ஒன்று இல்லாக்குறை பலராலும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டு வந்திருந்த போதிலும் அது தொடர்ந்தும் வெற்றிடமாகவே இருந்து வந்தது. இந்த வெற்றிடத்தை தற்போது விடிவெள்ளி நிறப்பியிருக்கிறது.
விடிவெள்ளி தினசரியாக வருவதற்கு உழைத்த அத்தனை பேருக்கும் அவதானி இணையத்தளம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
அத்தோடு, அச்சு ஊடகத்தின் தேவை நிறைவு செய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில் இலத்திரணியல் ஊடகத்தின் தேவையும் தற்போது உணரப்பட்டிருக்கிறது இதனையும் மிகவிரைவில் எமது சமூகம் பெற்றுக் கொள்ள சம்மந்தப்பட்டவர்கள் ஆவன செய்ய வேண்டும் என அவனாதனி இணையத்தளம் கேட்டுக் கொள்கிறது.

