Featured Home (TOP)

Recent Comments

Friday, February 27, 2015

Unknown

தேசிய அர­சாங்கம் தொட­ரு­மாயின் தமிழ் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யாகும்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஐக்­கிய தேசியக் கட்சி ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் கொண்டு செல்­லப்­ப­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு உரு­வெ­டுக்கும்.
அமர்­த­லிங்­கத்­தினால் ஏற்­பட்ட அச்­சு­றுத்தல் இனி ஒரு போதும் இடம்­பெற அனு­ம­திக்­கக்­கூ­டாது என தெரி­விக்கும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­யான தூய்­மை­யான ஹெல உறு­மய யாருக்கும் திறக்­காத சர்­வ­தேச கத­வுகள் எதிர்க்­கட்­சிக்­காக திறக்கும் அதற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு காத்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்தது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை மீண்டும் அர­சியல் மேடைக்கு கொண்­டு­வரும் முயற்­சியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­களான வாசு­தேச நாண­யக்­கார, தினேஸ் குண­வர்த்­தன, உதய கம்­மன்­பில, மொஹமட் முசம்மில் ஆகி­யோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று முன்தினம் கொழும்பில் இடம்­பெற்­றது. இதன் போது கருத்து தெரி­வித்த தூய்­மை­யான ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லாளர் உதய கம்­மன்­பில கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது;
அர­சியல் குழப்­பங்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றன பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து புதிய அர­சாங்­கத்­தினை உரு­வாக்­கி­யுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் இருக்­க­மான கூண்­டினுள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சிக்­கிக்­கொண்­டுள்­ளது. இது நாட்­டிற்கு பாரிய அச்­சு­றுத்­த­லா­கவே அமையும். பிரதா­ன இரு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து அர­சாங்­கத்­தினை அமைப்­பதால் பாரா­ளு­மன்றில் எதிர்க்­கட்­சி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாகும். 1983 இல் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்கள் கல­வ­ர­மொன்­றினை நடத்­தினர். இதில் குறிப்­பிட்ட அளவு தமிழ் மக்கள் பாதிக்­கப்­பட்­டனர். அப்­போது பாரா­ளு­மன்றில் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்த தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் அமிர்­த­லிங்கம் இவ்­வி­ட­யத்­தினை சர்­வ­தேசம் வரை கொண்டு சென்றார்.
இதனால் ஏற்­பட்ட விளை­வு­க­ளுக்கு இன்­று­வரை எம்மால் பதில் சொல்­ல­மு­டி­யா­துள்­ளது. அவ்­வா­றா­ன­தொரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­பார்க்கும் விட­யங்­களை சர்­வ­தேசம் வரை கொண்டு சென்று நாட்டை சீர­ழித்­து­விடும்.
யாருக்­கா­கவும் திறக்­காத கத­வுகள் எதிர்க்கட்சிக்காக திறக்கும். அதுவும் பிரிவினைவாதிகளுக்காக சர்வதேச கதவுகள் எப்போதும் திறக்கும்.
எனவே, நாட்டை பிரிவினைக்குட்படுத்தாது சரியான கட்சி அரசியலை மேற்கொள்ள வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனித்து இயங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Source Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :