கொழும்பு-
நுவரெலியாவிலுள்ள உலக முடிவைப் பார்வையிடச் சென்ற சீனப் பிரஜை ஒருவர் அங்கிருந்து விழுந்து காணாமல் போயுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங்கொமாண்டர் கிஹான் சேனவிரத்தன தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.
இந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிஹான் சேனவிரத்தன மேலும் தெரிவித்தார்.
