அவதானி
கடந்த 26.02.2015 அன்று காத்தான்குடி உலமா சபையில் 'நூதன சாலையில் சிலை வைப்பது தொடர்பாக' நடை பெறற் கலந்துரையாடலின் போது ஏற்பட்ட குழப்பத்தில் உலமாசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான மௌலவி முஸ்தபா பலாஹி அவர்களை மற்றுமொரு உலமாசபை உறுப்பினர் தாக்க முற்பட்ட சம்பவத்தை அவதானி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
கருத்துக்களை சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுதந்திரம் உள்ள நிலையில் அதனை மக்களுக்கு ஊடகம் ஊடாக தெளிவு படுத்திய மௌலவி அவர்களை உரிய முறையில் அணுகி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளாமல் அவரை தாக்க முற்பட்டது வேதனைக்குரிய விடயமாகும்.
இச்சம்பவத்தை உடனடியாக உலமாசபை விசாரித்து சம்மந்தப்பட்ட மௌலவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவதானி கேட்டுக் கொள்கிறது.
அத்தோடு காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவராக இருந்து செயற்படும் மௌலவி அவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தற்கும் அச்சுறுத்தலுக்கும் எதிராக மீடியா போரம் காத்திரமா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.
