Featured Home (TOP)

Recent Comments

Sunday, March 22, 2015

Unknown

மகப்பேற்று வைத்தியமும் நமது பெண்களும்.

இக்கட்டுரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னால் எழுத்தாளர் பைஸர் அமான் அவர்களினால் எழுதப்பட்டு இணையத்தளம் ஒன்றில் வெளிவந்ததாகும்.

தற்போது இணயத்தளங்களிலும் முகநூகலிலும் பேசு பொருளாக மாறியிருக்கும் வாழைச்சேனை வைத்திய சாலையில் கற்பிணித்தாய் ஒருவருக்கு நடந்த கொடுமை தொடர்பில் இது சமூகத்திற்கு விழிப்பூட்டும் கட்டுரையாக இருப்பதனால் காலத்தின் தேவை கருதி மீள்பிரசுhரம் செய்யப்படுகிறது.

(பைஸர் அமான் )

தற்கால நாகரிக உலகிற்கு முகம் கொடுக்க கூடிய நமது பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் ஏனைய சமுகங்களுடன் ஒப்பிடுகையில் பல்வேறு விடயங்களில் பின்தங்கி காணப்படுகின்றனர். உதாரணமாக கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு அம்சங்கள் என்பனவற்றை பிரதானமாக குறிப்பிடலாம். மேல் குறிப்பட்டுள்ள விடயங்களில் ஒரு சிலவற்றினையாவது நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரு சமுக நோக்கம் இதுவரை எந்தவொரு ஊரின் பிரதான தலைமைத்துவங்களுக்கோ அல்லது பெண்களுடைய வாக்குகளை மாத்திரம் சுவீகரித்துக் கொள்ளும் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கோ இருந்ததில்லை. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்தான் முதன் முதலாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவற்றை தமது எதிர் கால செயல்திட்டங்களில் ஒன்றாக உள்வாங்கியிருந்தது என்பதை மறுக்க முடியாது. அல்ஹம்துலில்லாஹ்.....


மேற்குறிப்பிட்ட விடயங்களில் மிக குறகிய காலத்திற்குள் தீர்க்கப்பட வேண்டி முக்கியமான தேவையாக கல்வியினூடாக உருவாக வேண்டிய அல்லது உருவாக்கப்பட வேண்டிய ஒரு மருத்துவ வெற்றிடம் இருக்கின்றது. அதுதான் ஏளைவைiபெ ழுடிளவநவசiஉயைn ரூ புலநெஉழடழபளைவ (ஏழுபு) என்று சொல்லக் கூடிய மகப்பேறு நிபுணத்துவம் மற்றும் பெண்கள் நோய் பற்றிய சிகிச்சைப் பிரிவு. 


21ம்; நூற்றாண்டில் நமது ஊர் கொண்டிருக்கின்ற வளங்களை வைத்துப் பார்க்கின்ற போது இந்த வெற்றிடம் எப்போதோ நிரப்ப பட்டிருக்க வேண்டும். இஸ்லாமிய விழுமியங்களுக்குட்பட்டு வாழ்ந்து வரும் நமது பெண்கள் மகப்பேறு என்று வருகின்றபோது அந்நிய (ஆண்) வைத்தியர்களைச் சார்ந்திருக்க கூடிய ஒரு துர்ப்பாக்கிய நிலைதான் இன்றளவும் நீடிக்கின்றது. நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது பெண்களை வைத்திய தேவைகளுக்காக பல தடவைகள் அந்நிய ஆண் வைத்தியர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை இருக்கத்தான் செய்கிறது. மருத்துவம் உட்பட அனைத்து துறைகளும் வர்த்தக மயமாகிப்போயுள்ள இக்கால கட்டத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி மகப்பேறு பற்றிய போதிய அறிவின்மையால் வைத்தியர்கள் சொல்லும் அத்தனை சோதனைகளுக்கும் தலையாட்டி பொம்மையாகவே இருக்க வேண்டிய நிலையேற்படுகின்றது.


பெண் மகப்பேற்று நிபுணர்களை நமதூர் கொண்டிருக்க வேண்டும் என்பது நம் எல்லோருடைய விருப்பமாக இருக்கின்றது. நமது மாணவிகளின் உயர்தரப் பெறுபேறுகளை பார்க்கும் போது மிக விரைவாக இக்குறை பாட்டை தீர்த்துவிட முடியும். ஆனால், அதற்குரிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது சமூகத்தின் கடமை என்பதை நம்மில் பலர் மறந்து விடுகின்றோம். இது மிகவும் சவாலானதொரு துறை என்பது உண்மை. இதை அடைந்து கொள்வதற்கு குறிப்பிட்ட மாணவிp, பெற்றோர் மற்றும் சமுகம் என்பவற்றின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

1. மாணவி:
இதற்கு தகுதியான பல மாணவிகள் இருக்கின்றபோதும் சமூகத்தில் தனியானாளாக போராட வேண்டும் என்கின்ற மனப்பாங்கும் உயர் கல்வி என்று வருகின்ற போது சமூகத்தில் எதிர் நோக்குகின்ற அநாவசியமான விமர்சனங்களுக்கு நாம் ஆளாக வேண்டிவரும் என்கின்ற பயமும்தான் அந்த மாணவிகளுக்கு இக்கல்வியில் இருக்கின்ற ஆர்வத்தை தடை செய்கின்றது. 


முதலில் இந்த தாழ்வு மனப்பாண்மையிலிருந்து மாணவிகள் வெளியில் வரவேண்டும். அதோடு இந்த மருத்துவத் துறையினை ஒரு தொழிலாக மாத்திரம் நோக்காது சக தோழிகளுக்கான ஒரு சேவையாகவும் பார்க்க வேண்டும்.


2. பெற்றோர்:
இறைவன் தன் பிள்ளைக்கு கொடுத்திருக்க கூடிய அறிவுத்திறமையை அற்ப காரணங்களுக்காக வீணடிக்கும் பெற்றோர்களும் நம் சமுகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அளவுக்கதிகமான செல்வம் இருக்கும் போது அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதை எப்படி இறைவன் வலியுறுத்துகின்றானோ அதே அளவுகோல்தான் கல்விக்கும் நாம் வைத்துப் பார்க்க வேண்டும். பல மாணவிகளுள் தன்பிள்ளைக்கு மாத்திரம் இறைவன் கொடுத்திருக்க கூடிய திறமையை வீணாக்காமல் தேவையான பாதுகாப்பு, பெற்றோர் என்கின்ற வரையறைக்குட்பட்ட கண்டிப்புடன் அவர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.

3. சமூகம் :
பெண் மருத்துவம் போன்ற முக்கியமான மேல் படிப்புக்களுக்கு சமூகத்தின் ஒத்துழைப்பு மிக அவசியப்படுகின்றது. திறமையிருந்தும் வறுமையின் பிடியில் இருக்கின்ற பெற்றோரை இனங்கண்டு அவர்களுக்கு சகல உதவிகளையும் செய்து கொடுக்க சமுகத்திலுள்ள பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் முன் வர வேண்டும். சொந்த முயற்சியால் வென்று வரும் மாணவர்களுக்கு சம்பிரதாயமான பதக்கம் அணிவிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் புலமைப் பரிசில்கள் வழங்குவதன் மூலம் அவர்களின் உயர் படிப்புக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதோடு ஒரு சிலர் செய்கின்ற சமுக விரோதமான செயல்களை வைத்து ஏனைய மாணவிகளை எடைபோடும் கேவலமான போக்கை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். 


இறுதியாக நமது உழைப்பில்தான் நாம் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதுபோல, நம்மை நாம்தான் ஆழ வேண்டும் என்று ஆசைப்படுவது போல, நமது பெண்களின் மருத்துவ தேவைகளை நமது பெண்களே சீர் செய்யவேண்டும் என்ற ஆசையும் உறுதியும் பூண்டவர்களாக அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற முதுமொழிக்கமைய எமது செயற்பாடுகளை எதிhகாலத்தில் ஆக்கிக் கொள்வோமாக.


நமது உள்ளங்களிலுள்ள ஹலாலான எண்ணங்களை இறைவன் வசப்படுத்தி தருவானாக.

  

      
      

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :