(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் 20-03-2015 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டார்.
மேற்படி இம் மக்கள் சந்திப்பு காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் காரியாலத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் சாந்தி முஹைதீன் தலைமையில் இடம்பெற்ற இம் மக்கள் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் , முன்னாள் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மர்சூக் அஹமட் லெவ்வை,முன்னாள் ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினர் மதீன் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தப்பட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கினினால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)