நாடு பூராவும் ரொடா வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இக்காய்ச்சல் ஏற்பட்டவர்கள் பெரசிட்டமோல் மருந்தைத் தவிர வேறு எதுவும் உட்கொள்ளக் கூடாது எனவும், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலுக்கு உட்பட்டவர்கள் அவசரமாக வைத்திய நிபுணர்களைச் சந்திக்கும் படியும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வாந்தி, தலைவலி, கடும்காய்ச்சல், மலம் கழிக்கும் போது அல்லது வாந்தியெடுக்கும் போது இரத்தம் வெளியேறல், முகத்தில் அல்லது உடம்பில் சிவப்பு கொப்புளங்கள் தோன்றல் என்பன இவ்வைரஸின் அறிகுறிகள் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
நன்றி -டெய்லி சிலோன்
