Featured Home (TOP)

Recent Comments

Thursday, April 23, 2015

Unknown

100 நாள் திட்டத்தை முழுமையாக நாம் நிறைவேற்றியுள்ளோம்

மக்­க­ளுக்கு நாம் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய அர­சாங்­கத்தின் நூறு நாட்கள் வேலைத்­திட்டம் முழு­மை­யாக நிறை­வ­டைந்­த­துள்ளது. கொடுத்த வாக்­கு­று­தி­களை செய்து காட்டி விட்டோம் என அர­சாங்கம் தெரி­வித்­தது.
19ஆவது திருத்தம் மட்­டுமே எஞ்­சி­யுள்ள நிலையில் அதையும் நிறை­வேற்­றி­விட்டு பொதுதேர்­த­லுக்கு செல்­வதா­கவும் குறிப்­பிட்­டது. அர­சாங்க தகவல் திணைக்­களத்தில் இடம்­ பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

நாம் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்­தினை முழு­மை­யாக முடித்துவிட்டோம்.நாம் மக்­களின் வாழ்­வா­தார சுமை­யினை குறைப்­ப­தாக குறிப்­பிட்டோம்.
அதை செய்து காட்­டி­விட்டோம். இதில் விமர்­ச­னங்­க­ளுக்கு இடம்­இல்லை. அரச ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு ஓய்­வூ­திய நிதிக் கொடுப்­ப­னவு உயர்­வ­டைந்து விட்­டது. தனியார் துறை­யி­ன­ருக்­கான சம்­பள உயர்வு தொடர்பில் கோரிக்கை விடுத்­துள்ளோம். சமூர்த்தி வேலைத்­திட்டம் கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்­கான போசனை வேலைத்­திட்டம் மற்றும் அவர்­க­ளுக்­கான நிவா­ரணம் வழங்­கு­வதில் மிகப் பெரிய வெற்றி கண்­டுள்ளோம். அதே போல் அத்­தி­யா­வ­சி­யப்­பொ­ருட்­களின் விலை குறை­வ­டைந்­துள்­ளது. மக்கள் உணரும் வகையில் நிவா­ரணம் வழங்கப்பட்டுள்ளது.
எரி­பொருள் நிவா­ரணம் வழங்­கு­வ­தாக குறிப்­பிட்டோம். எரி­வாயு விலை குறைப்பு செய்­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கினோம். அதற்­க­மைய விலைக்­கு­றைப்பு செய்­துள்ளோம். நெல்­லுக்­கான நிர்­ணய விலை அதி­க­ரிப்பு செய்­துள்ளோம். அதேபோல் பெருந்­தோட்ட துறை நிவா­ர­ணங்­களை பெற்­றுள்­ளது. ஒரு சில இடங்­களில் தவ­றுகள் சில இடம்­பெற்­றி­ருக்க முடியும் சில விட­யங்­களில் கால தாமதம் ஏற்­பட்­டி­ருக்­கலாம் ஆனால் எமது 100 நாள் வேலைத்­திட்­டத்தில் மக்­களின் அத்­தி­யா­வ­சிய பொருட்கள் விலை குறைப்பு நிவா­ர­ணங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
வடக்கில் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நிவா­ரணம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. இல­வச வை பை இணைய தொழில்­நுட்பம் செயற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இளைஞர் பாரா­ளு­மன்றம் பல­ம­டைந்­துள்­ளது. இவ்­வாறு பல வேலைத்­திட்­டங்கள் முழு­மை­யாக முடி­வ­டைந்து விட்­டது. வீட­மைப்பு ஒள­டத மருத்­துவ செயற்­பா­டுகள் கல்­விசார் நட­வ­டிக்­கைகள் என அனைத்தும் முழு­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதே போல் கருத்து சுதந்­திரம் பல­ம­டைந்­து­விட்­டது. இவற்றில் சில செயற்­பா­டுகள் விடு­பட்­டி­ருக்­கலாம். ஆனால் நாம் குறிப்­பிட்­ட­தற்கு அமைய மக்­களின் வாழ்­வா­தார சுமை­யினை குறைத்து விட்டோம். நூறு நாட்­களில் அபி­வி­ருத்தி செய்ய முடி­யாது. ஆனால் மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் மட்­டுமே வழங்க முடியும். அதை செய்து கொடுத்­துள்ளோம். இத­னூ­டாக எதிர்­வரும் காலங்­களில் அபி­வி­ருத்­தியின் பாதையில் கொண்டு செல்ல முடியும்.
இவ் விட­யத்தில் விமர்­ச­னங்கள் எழும்­பலாம் அதை ஏற்றுக் கொள்­கின்றோம். ஆனால் குறைகளை நிரூபிக்க முடியாது. பிரதமரின் திட்டத்தில் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தினை செய்து முடித்துள்ளோம். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக செயற்பட்டுவிட்டது. 19 ஆவது திருத்தம் மட்டுமே எஞ்சியுள்ளது. அதையும் நிறைவேற்றிய பின்னர் பொதுத் தேர்தலுக்கு தயாராகுவோம்.

- VK

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :