Featured Home (TOP)

Recent Comments

Wednesday, April 22, 2015

Unknown

28இல் 19ஐ நிறைவேற்ற முடியாவிடின் பாராளுமன்றத்தை கலைப்போம் : அரசாங்கம் திட்டவட்டம்

எதிர்­வரும் 28ஆம் திகதி 19ஆவது திருத்­தத்தை நிறை­வேற்ற முடி­யாமல் போனால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என அறி­வித்த அர­சாங்கம் சட்டச் சிக்­கல்­களில் சிக்­கிக்­கொண்­டுள்ள சில எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களே 19ஐ நிறை­வேற்­று­வதை சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கை­களின் பின்னால் செயற்­ப­டு­கின்­றனர் என்றும் குற்றம் சாட்­டி­யது.
பாரா­ளு­மன்­றத்தின் ஆளும் கட்சி கொற­டாவின் அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நன்­பகல் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அர­சாங்கம் சில அறி­விப்பை விடுத்­தது.
இங்கு உரை­யாற்­றிய ஆளும் கட்­சியின் பிர­தம கொற­டாவும் அமைச்­ச­ரு­மான கயன்த கருணா திலக, இன்று பாரா­ளு­மன்­றத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆளும்­கட்சி எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் சந்­தித்­த­தோடு கட்சித் தலை­வர்கள் கூட்­டமும் ஜனா­தி­பதி பிர­தமர் தலை­மையில் இடம் பெற்­றது.
இதன் போது 19ஆவது திருத்தம் தொடர்­பாக ஆழ­மாக ஆராய வேண்­டு­மென்றும் அதற்கு கால அவ­காசம் தேவை­யென்றும் எதிர் தரப்­பினர் கோரிக்கை விடுத்­தனர். அதற்­கான சந்­தர்ப்­பத்தை வழங்­கு­மாறும் கேட்­டனர். இதற்கு செவி­மெ­டுத்து 19ஆவது திருத்­தத்தை ஆராய்­வ­தற்­கான கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது.
இதற்­க­மைய எதிர்­வரும் 27ஆம் 28 ஆம் திக­தி­களில் விவாதம் காலை 9.30 முதல் நடத்­தப்­பட்டு 28ஆம் திகதி மாலை வாக்­கெ­டுப்பு நடத்­தவும் ஆளும் மற்றும் எதிர்க்­கட்சி தரப்பில் இணக்­கப்­பாடு காணப்­பட்­டது.
எனவே நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் நலன் கருதி இதனை நிறை­வேற்ற அனை­வரும் ஆத­ரவு வழங்க வேண்­டு­மென்றும் அமைச்சர் கயன்த கருணா திலக தெரி­வித்தார்.
பிர­தி­ய­மைச்சர் சுஜீவ சேன­சிங்க -
19ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­றாது தடுப்­ப­தற்கு சட்டச் சிக்­கல்­களில் சிக்­கி­யுள்ள சில எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் மெள­ன­மாக இருந்து கொண்டு பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­களை சீர்­கு­லைக்கும் செயல்­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.
எதிர்­வரும் 25ம் திகதி தான் இறுதி நாள். அன்­றைய தினம் 19 ஐ நிறை­வேற்ற முடி­யாமல் போனால் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பெதுத்­தேர்­த­லுக்கு செல்வோம். அதன் பின்னர் ஏற்­ப­டுத்­தப்­படும் அரசில் இந்த 19ஐ நிறை­வேற்­றுவோம்.
பெரும்­பா­லான அமெ­ரிக்­கர்­க­ளுக்கு இலங்கை எங்­கி­ருக்­கின்­றது என்­பது தெரி­யாது. இந்­நி­லையில் அமெ­ரிக்க ராஜாங்க செய­லாளர் ஜோன் கெரி இங்கு வரு­வது பெரு­மைக்­கு­ரி­ய­தாகும். பெரும்­பாலும் அவர் இங்கு வந்து சென்ற பின்னர் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டலாம்.
லஞ்ச ஊழல்கள் ஆணைக்­கு­ழுவின் விட­யங்­களில் பிர­த­மரோ அரசோ தலை­யி­டு­வ­தில்லை. அவ் ஆணைக்­குழு தனது கட­மை­களை சுயா­தீ­னை­மாக முன்­னெ­டுக்­கின்­றது. இதில் எவரும் தலை­யிட முடி­யாது. அது தான் நல்­லாட்­சி­யாகும். ஆனால் எமது நாட்டில் இன்றும் நல்­லாட்­சியின் நட­வ­டிக்­கைகள் பழக்­கத்தில் வர­வில்லை என்றார்.
பிர­தி­ய­மைச்சர் கலா­நிதி ஹர்­ஷத சில்வா-
அர்ஜுன மகேந்­திரன் தொடர்­பான விசா­ரணைக் குழுவின் அறிக்கை அடுத்த பாரா­ளு­மன்ற கூட்­டத்தின் போது அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் கையளிக்கப்பபடும்.
பந்துல குணவர்த்தன எம்.பி உட்பட வேறு சில எதிர்க்கட்சியினர் மத்திய வங்கி பிணை முறி விடையத்தில் 42 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். இதில் உண்மையில்லை. அரசை நெருக்கடியில் தள்ளுவதற்கு பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :