(-எம்.எச்.எம்.அன்வர்- பயாஸ் அஹமட்)
காத்தான்குடி மீடியா போரத்தின் 16வது வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் அதன் தலைவர் மௌலவி எஸ்எம்.எம்.முஸ்தபா பலாஹி தலைமையில் இன்று (15.04.2015) காத்தான்குடியில் இடம்பெற்றது
போரத்தினால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பணிகள் ஊடகவியலாளர்களின் ஊடக தர்மம் ஊடக ஒழுக்கம் ஊடக நாகரீகம் எவ்வாறு அமைய வேண்டும் பிறரின் மானம் மரியாதை பாதுகாக்கப்படவேண்டும் எனவும் தாம் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பாகவும் விரிவாக அதன் தலைவர் தெரிவித்தார்
பொதுச்சபைக் கூட்டத்தில் பின்வருவோர் 2015 இற்கான நிருவாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்
தலைவராக ஏ எல் டீன் பைறூஸ்
செயலாளராக எம்.எச்.எம்.அன்வர்
உப தலைவராக மௌலவி எஸ் எம்.எம் முஸ்தபா (பலாஹி)
பொருளாளராக எஸ் ஏ கே பலீலுர் ரஹ்மான்
உப செயலாளராக எம் ஐ ஏ நஸார்
தகவல் பணிப்பாளராக எம்.ஐ.எம்.கமால்தீன்
உறுப்பினர்களாக: எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ எம் சாதிக்கீன், எம்எப்எம் பஸால் ஜிப்ரி ,யு எல் எம் சபீக் ,எம் எஸ் எம் சஜி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன் புதிதாக போரத்தில் சேர்ந்துகொண்ட அங்கத்தவர்களின் அறிமுக நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது