வில்பத்து சரணாலயம் தொடர்பாக அமைச்சரவை உபகுழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள தாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.
வில்பத்து சரணாலாய விடயம் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் எவ்வாறான விடங்கள் கலந்துரையாடப்பட்டன என கேள்வியெழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வில்பத்து சரணாலயத்தில் எநத்வொரு முஸ்லிம்களும் சட்டவிரோதமாககுடியேற்றப்படவில்லை. அவர்களுக்குச் சொந்தமான உறுதிகள் வழங்கப்பட்ட காணிகளிலேயே குடியேற்றப்பட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளம் பகுதியில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு குடியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தற்போது பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.இவ் விடயங்களை அமைச்சரவையில் நான் தெளிவு படுத்தினேன். அத்துடன் அமைச்சரவை உபகுழுவொன்றை அமைத்து இவ்விடயம் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரினேன். அம்மக்களின் மீள்குடியேற்றம் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக உரிய முறையில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
மேலும் வில்பத்து சரணாலயத்தில் சட்டவிரேதமாக மரங்களை அழித்ததாக என்மீது குற்றம் சாட்டுவது தவறானதொன்றாகும். வனபாதுகாப்புச் சட்டங்களுக்கு அமைவாக பாரிய மரங்களை அனுமதியின்றி வெட்டுவது குற்றமாகும். ஆகவே அனுமதி பெறப்பாடாது மரங்கள் வெட்டப்பட்டிருப்பின் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். எமது நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை என்றார்.
Virakesary